நடிகர் நவாசுதீன் சித்திக் அவரது மனைவி ஆலியா சித்திக் இருவரும்  விவாகரத்து கோரி சட்டரீதியாக அதனை எதிர்கொண்டு வரும் நிலையில், நவாசுதீனின் வீட்டு வெளியே அவரது பிள்ளைகள் காக்க வைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாலிவுட்டில் தனது மாறுபட்ட மற்றும் தனித்துவ நடிப்பால் தனி இடம் பிடித்து, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் நவாசுதீன் சித்திக்.


பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து கோலிவுட் ரசிகர்களையும் ஈர்த்த நவாசுதீன், தற்போது தன் தனிப்பட்ட வாழ்வில் தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு நவாசுதீன் ஜைனப் எனப்படும் ஆலியா அஞ்சனாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மோசமான குற்றச்சாட்டுகளை நவாசுதீன் மீது அலியா மோசமான முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர்.


நவாசுதீன் தன்னை திருமணத்துக்காக மதம் மாற கட்டாயப்படுத்தினார் என்றும், குடும்ப வன்முறையில் ஈடுபட்டார், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என அடுக்கடுக்கான பல புகார்களை முன்வைத்ததுடன் அந்த ஆண்டே தன் குழுந்தைகளுடன் துபாய் சென்று வாழத் தொடங்கினார்.


இதனிடையே சட்டரீதியாக இருவரும் விவாகரத்து கோரி எதிர்கொண்டு வரும் நிலையில், சென்ற மாதம் ஆலியா துபாயிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு தொடங்கியது முதல் இவர்களது குடும்பத்தில் தொடர் பிரச்னைகள் வெடித்து வருகின்றன.


முன்னதாக ஆலியா தங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நவாசுதீனின் தாய் மெஹருன்னிஷா முன்னதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.


தொடர்ந்து தன் மகளை நவாசுதீன் தன்னிடமிருந்து பிரிக்க முயல்வதாகவும், இரண்டாவதாகப் பிறந்த தன் மகனை ஏற்க நவாசுதீன் மறுப்பதாகவும், மரபணு சோதனை நடத்துமாறும் முன்னதாக அலியா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தற்போது நவாசுதீனின் உடல்நிலை சரியில்லாத தாயை பார்க்கச் சென்ற
தன் குழந்தைகளை வீட்டுக்குள் விட அனுமதி மறுத்ததாக கண்ணீருடன் அலியா வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


 






இந்த வீடியோவில் நவாசுதீனின் மகள் ஷோரா கண்ணீர் விட்டு அழும் நிலையில், இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


நவாசுதீன் தற்போது ஹட்டி படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.