கோபிசந்த் இயக்கும் புதியப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு NBK 107 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கோபிசந்த் இயக்குகிறார். இந்தப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. தற்போதைக்கு என்.பி.கே. 107 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியது. இந்தப் பட பூஜையில் ஷ்ருதி ஹாசன், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 






 


இந்த நிலையில் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் சுருதி ஹாசன் இணைந்திருப்பது பற்றி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிலர் சுருதிஹாசன் பாலகிருஷ்ணாவின் மகள் வயதில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது எப்படி சுருதி இவருக்கு சரியாக இருப்பார். தயவு செய்து ஹீரோயினை மாற்றி விடுங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படம் பாலகிருஷ்ணாவின் 107 வது படமாக உருவாகி வருகிறது. முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் ஷ்ருதி ஹாசன் 2 படங்களில் நடித்தார்.இந்தப் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கோபிசந்தின்  ராசியான ஹீரோயினாக சுருதி ஹாசன் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் அவர் தற்போது இந்தப்  படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




முன்னதாக, நடிகை சுருதிஹாசன் ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய், விஷால் உள்ளிட்ட  சில முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கான வாய்ப்புகள் குறையவே அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை சுருதிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தமிழில் இறுதியாக விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.


ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பரீட்சியப்பட்ட நடிகைகள் திரையில் தோன்றினால்தான் அந்த படத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய சூழலில் கோலிவுட் ரசிகர்கள் தேர்வு முழுவதும் சிறந்த கதைகளின் பக்கம் படையெடுக்க தொடங்கியிருக்கிறது. இது ஆரோக்யமான விஷமாக பார்க்கப்பட்டாலும் சில நடிகைகளுக்கு இது சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. அப்படித்தான் ஸ்ருதிஹாசன்  சமீபத்தில் வெளியான படங்களில் கதைத்தேர்வுகளில் சொதப்பியிருக்கிறார் என ரசிகர்கள் கருதுகின்றனர். மீண்டும் நல்ல படங்களை தேர்வு செய்து கோலிவுட் பக்கம் சிறந்த கம் பேக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.


ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஓவியரான  சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுவுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஸ்ருதிஹாசன் முன்னதாக  இத்தாலியை சேர்ந்த மைக்கல் கோர்ச்சல் என்பவரை காதலித்து வந்தார். அவர் லண்டலின் வசித்து வந்ததால் அவ்வப்போது அங்கும் விசிட் அடித்தார். பின்னர் மைக்கலை இந்தியாவிற்கு அழைத்து வந்து , தமிழர் கலாச்சாரங்களையும் கூட சொல்லிக்கொடுத்து, தனது தந்தை கமல்ஹாசனிடமும் கூட மைக்கேலை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில காலங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.