நாக சைதன்யா (Naga Chaitanya) தன் கையில் இருக்கும் டாட்டூ (tattoo) குறித்து மனம் திறந்துள்ளார். மேலும், ரசிர்கள் யாரும் அவர் கையில் உள்ளதைப் போல டாட்டூவை வரைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்னு தெரியுமா? 


நாக சைதன்யாவின் கையில் ஒரு டாட்டூ வரைந்திருப்பார். அதில் நாக சைதன்யா- சமந்தா உடனான திருமண தேதியை மோர்ஸ் Code வடிவில் வரைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் பபுள்(Bollywood Bubble.) இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் டாட்டூவுக்கான அர்த்தம் குறித்து பகிர்ந்துள்ளார்.


 






தனது டாட்டூவில் தன் திருமண தேதி இருப்பதால் அதை யாரும் டாட்டூ தேர்வாக கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற் திருமணம் விரைவில் முடிவுக்கு வந்தது.


தொடர்ந்து,கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். வெவ்வேறு கருத்து வேற்றுமைகளின் காரணமாக, நான்கு ஆண்டுத் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக இருவரும் அறிவித்தனர். 


ரசிகர்கள் தன்னை போல டாட்டூ வரைய விரும்புவர்களுக்கு, “என் கைகளில் உள்ளபோன்றே டாட்டூ வரைந்திருக்கும் என் ரசிகர்களை நான் கவனித்திருக்கேன். அதில் எண் திருமண நாள் இருக்கிறது. என் திருமண நாளை யாரும் டாட்டூவாக வரைய வேண்டாம். சில விஷ்யங்கள் மாறலாம், நானே இந்த டாட்டூவை மாற்றலாம். அதனால, நீங்கள் டாட்டூ போட விரும்பினால், என் கைகளில் உள்ளது போன்றே வேண்டும் என்ற தேர்வை எடுக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.


அவர் கையில் உள்ள டாட்டூவை மாற்ற போகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அப்படியேதும் எண்ணம் இல்லை.” என்று கூறியுள்ளார்.






 


நாக சைதன்யா விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். Laal Singh Chaddha , அமீர் கான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன்  இணைந்து நடிக்க இருக்கிறார். இந்தப் படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.