பிரபுதேவாவிடம் முதலில் மொட்டை போட வேண்டும் என்று சொன்ன போது யோசித்ததாக  ‘மை டியர் பூதம்’ படத்தை இயக்கி இருக்கும் N.ராகவன் பேட்டியளித்துள்ளார். 


அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. குழந்தைகளுக்கான ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் பிரபல நடிகரான பிரபுதேவா பூதமாக நடித்து இருக்கிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 




இந்தப்படம் படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறும் போது, “என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் பண்ண வேண்டும் என்பது  ஆசை. அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் பண்ணலாம் என தோன்றியது.


மகளோடு நிறைய பழகினேன்


தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை. ஆகவேதான் அதை சொல்லலாம் என நினைத்தேன். குழந்தைகள் உலகை புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறைய பழகினேன். குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என தெரிந்து கொண்டேன்.


அதன் பிறகு தான் இந்த திரைக்கதையை எழுதினேன். தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளையிடம் இந்தக் கதை சொன்ன போது, அவர் பிரபுதேவா நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். அவரை மனதில் வைத்தே நானும் எழுதியிருந்தேன். பிரபுதேவாவிடம் கதையை சொன்ன போது, கதை பிடித்து உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது. 


மொட்டை அடித்துக்கொண்ட பிரபு தேவா 


இந்தப்படத்திற்காக பிரபுதேவா மாஸ்டர் மொட்டை போட வேண்டியிருந்தது.





அவர் நிறைய படங்கள் செய்து கொண்டிருந்ததால், யோசித்தார். பின்னர் கெட்டப் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு அவரே மொட்டை போட்டுக்கொண்டு நடித்தார். 45 நாட்கள் எங்குமே அவர் தலை காட்டவில்லை. இந்தப்படத்திற்காக முழுக்க அர்ப்பணிப்போடு உழைத்தார். அந்த கெட்டப்பில் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள். இப்படத்தில் குழந்தையாக வரும் அஷ்வந்த கலக்கியிருக்கிறார்.


தூக்கி சாப்பிடுறான்ம்பா


பிரபுதேவா சார் இந்தப்பையன் நம்மை தூக்கி சாப்பிடுறான்ம்பா என்று புகழ்ந்தார். இந்தப்படத்தில் பரம் குகனேஷ், ஆலியா, சாத்விக், சக்தி, ஆகியொருடன் என்னோட பொண்ணு கேசிதாவும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் சம்யுக்தா ஒரு ரோலில் வருகிறார்.