இசையமைப்பாளர் இளையராஜா நடுவராகப் பங்கேற்கும் புதிய இசை ரியாலிட்டி ஷோ விரைவில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாக உள்ளது.இதுகுறித்த ட்ரெய்லர் தற்போது அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.  ’நேற்று இல்லை நாளை இல்லை..எப்பவுமே ராஜா ராஜாதான்’ என்னும் அளவுக்கு இந்தியத் திர இசை உலகின் நிகரற்ற இசையமைப்பாளராகக் கருதப்படும் ராஜா ஒரு இசை நிகழ்ச்சியில் முழு நேர நடுவராகப் பங்கேற்க உள்ளார் என்றதும் அது எதுமாதிரியான ரியாலிட்டி ஷோ என்னும் எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எகிறியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு ‘ராஜபார்வை’ என டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.






நமக்குக் கிடைத்துள்ளத் தகவல்களின்படி இந்த இசை நிகழ்ச்சியில் பல்வேறு தனி இசைக்குழுக்கள் பங்கேற்கின்றன என்றும் அவற்றில் சிறந்த இசைக்குழுவை ராஜா தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.இதில் வெளிநாட்டில் இருந்தெல்லாம் இசைக்குழுக்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ட்ரெய்லரில், துள்ளல் நடையும் கோட்டும் சூட்டுமாக ’இளமை’ ராஜாவாக வலம் வருகிறார் இளையராஜா. 


முதல்முறையாகத் சின்னத்திரையில் இளையராஜா தோன்றுவதை அடுத்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


மேலும் சினிமா செய்திகளுக்கு...