Ilaiyaraaja Announcement: நாளை மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் இளையராஜா... அனல் பறக்கும் ட்விட்டர்!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

Continues below advertisement

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். அது இசை தொடர்பான அறிவிப்பா அல்லது அரசியல் தொடர்பான அறிவிப்பா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், தனது இசை நிறுவனத்தையும் டேக் செய்து அவர் வெளியிட்டுள்ளதால், பெரும்பாலும் இசை நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பாகவே இருக்கும் என தெரிகிறது. 

Continues below advertisement

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் இளையராஜா, “ காத்திருங்கள்.. நாளை மாலை 6 மணிக்கு ஜூன் 5 அன்று நடைபெற விருக்கும் சிறப்பு நிகழ்ச்சி குறித்தான அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

 

தமிழ் சினிமாவின் இசை மேதையாக பார்க்கப்படுபவர் இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இருக்கும் இளையராஜா 1000த்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். படங்களுக்கு ஒரு பக்கம் இசையமைத்து வரும் இளையராஜா மற்றொரு பக்கம் இசைக்கச்சேரிகளை நடத்துவதையும் வழக்கமாக மாற்றி இருக்கிறார்.

 

அவரது இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அண்மையில் கூட சென்னை தீவு திடலில் ராக் வித் ராஜா என்ற பெயரில் இசைக்கச்சேரியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, கங்கை அமரன், பவதாரணி, கீர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தனது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி கோவையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருப்பதாக இளையராஜா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola