ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரங்கநாயகி மீனாட்சிக்கு சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, “ரங்கநாயகி மீனாட்சி வீட்டில் இருக்கும் வெற்றியிடம் ஒரு பெண் என்னை மிரட்டி கெடு கொடுத்திருக்கிறாள். அந்த ரவுடி பெண்ணை அடிக்க வேண்டும்” என்று சொல்ல, மீனாட்சி வெற்றியிடம் சண்டை எல்லாம் தேவையில்லை என்று சொல்ல, மீனாட்சிக்கும் ரங்கநாயகிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ரங்கநாயகி கோபத்துடன் போய் விடுகிறாள்.


அடுத்ததாக சக்தி வெற்றியிடம் அடிதடிக்கு எல்லாம் போகாமல் இருந்தால் நான் உனக்கு முத்தம் தருகிறேன் என்று சொல்ல, மார்க்கெட்டில் அடியாட்களுடன் பெண் ரவுடி காந்தாரா காத்துக் கொண்டிருக்க வெற்றி காவல்  நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இருந்து கொண்டு சண்டைக்கு போகாமல் அமைதியாக இருக்கிறான்.


புஷ்பாவும் சங்கிலியும் ரங்கநாயகிக்காக சண்டை போட்டு வெற்றி போலீசில் மாட்டி கொள்வான் என நினைத்து ஏமாற்றம் அடைகின்றனர். ரங்கநாயகி ரவுடி காந்தாரா இருக்கும் இடத்திற்கு வந்து அவள் நெற்றியில் துப்பாக்கியை வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.