தென்னிந்திய ரசிகர்கள் ஒரு இயக்குநரை காதல் தீவிரவாதி என வரையறுக்கிறார்கள் என்றால் அது இயக்குநர் மணிரத்தினம்தான். பாலச்சந்தர், பாரதிராஜா வரிசையில் தனக்கென தனி  பாணியில் காதல் கதைகளை சொன்னவர். 80 களில் இருந்தே தமிழ் சினிமாவை காதல் மழையால் நனைத்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான மௌனராகம் , நாயகன் , அக்னி நட்சத்திரம் ,அஞ்சலி, தளபதி, திருடா திருடா , பம்பாய் , அலைபாயுதே என பல படங்கள் இன்றளவும் பலருக்கு ஃபேவரட்.  கடந்த ஆண்டு அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் மணிரத்தினம் அவரது மனைவி சுஹாசினியுடன் நடிகர் நடிகைகளுடன் கலந்துரையாடினார். 


மாதவன் , அதிதி , குஷ்பு உள்ளிட்ட பலருடனுன்தான் பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்த மணிரத்தினம் குஷ்புவுடன் பேசியபொழுது அவரது இளைய மகள் மணிரத்தினத்தின் தீவிர ரசிகை என்றும் அவர் , மணிரத்தினத்துடன் பேச விரும்புவதாக குஷ்பு கூறினார். முதலில் ஹாய் சொன்ன குஷ்பு மகள் , மணிரத்தினத்தை கண்டவுடன் ஆனந்தத்தில் அழ தொடங்கிவிட்டார். இதனை சற்று எதிர்பாராத மணிரத்தினம் , இப்படி ஒரு பெண்ணை அழ வைத்துவிட்டேனே..சாரிமா என்றார்.


தொடர்ந்து பேசிய குஷ்பு , நீங்க எனக்கு முந்தைய தலைமுறை , என் தலைமுறை, இப்போ என் குழந்தைகள் தலைமுறை என அனைத்திற்குமான மேஜிக் செய்துவிட்டீர்கள் சார், அந்த மேஜிக் என்ன என சொல்ல முடியுமா என கேட்க, அதற்கு மணிரத்தினம் மேஜிக்கை வெளியில் சொல்லக்கூடாது என தனக்கே உரித்தான பாணியில் பதிலளித்தார்.தொடர்ந்து பேசிய குஷ்பு மகள் , நள்ளிரவு 2 மணிக்கு கூட உங்களது படங்களைத்தான் பார்ப்பேன் சார். ரோஜா, இன்றைக்கு தளபதி என தினமும் உங்கள் படம்தான் என்றார்.




மணிரத்தினம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். தற்போது பல இயக்குநர்கள் கனவு கண்ட பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 



பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் , மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஒடிடி விற்பனையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.