வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகு சுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.




பல ஆண்டுகளாக ரசிகனாக நடிகர் விஜயை ரசித்துவந்த லோகேஷ் ’மாஸ்டரை’ இயக்கி, கடந்த பொங்கலுக்கு வெளியிட்டார். இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் அடுத்த மயில்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார். தேர்தல் முடிந்த கையோடு, கமல்ஹாசன் தற்பொழுது விக்ரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டார் என்பது தெரிந்த அப்டேட்தான். படத்தில் பகத்ஃபாசில் இணைகிறார் என்று ஒரு நிகழ்ச்சி பேட்டியில்  தெரிவித்திருந்தார் . ரசிகர்கள் இடையில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக தற்பொழுது விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி இணையத்தில்  வைரலாக பரவியுள்ளது .




இதனை தொடர்ந்து மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் அங்கமாலி டைரிஸ் படத்தில் பெப்பேவாக தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் தற்பொழுது விக்ரம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது . ஏற்கனவே விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தில்  இணைந்து பின்பு தேதி இல்லாமல் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது .




பெப்பே கோலிவுடில் அறிமுகம் ஆகப்போகிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பெரிய நடிகர் பட்டாளம் விக்ரம் படத்தில் இணையப்போகிறது . கடந்த இரண்டு நாட்களாக விக்ரம் படத்தின் அப்டேட்கள் ரசிகர்கள் இடத்தில பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது . இந்தப் படத்தின் முதல் போஸ்டர் ரிலீஸ் இந்த சக நடிகர்களை வைத்து எவ்வாறாக இருக்கப்போகிறது என்பது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது .


https://tnstaging.abplive.com/entertainment/tamil-actor-vijay-sethupathi-joins-hands-with-vikram-move-as-a-antagonist-3396/amp


கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது . மே 31-ஆம் தேதிக்கு பிறகு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது . மேலும் படப்பிடிப்பு கொரோனா கட்டுப்பாட்டுக்கு பிறகு மிக விரைவாக நடக்கக்கூடும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு படம் வெளிவரக்கூடுமா ? என்று ரசிகர்கள் லோகேஷியிடம் இணையத்தில் கேள்வி எழுப்பிவருகிறார்கள் . ரசிகர்களைப்போல நாமும் அதிகாரபூர்வ தகவலுக்காக காத்திருப்போம்