நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று திரையிடப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, சுனில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில்  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள  சோனா மீனா திரையரங்கில் நேற்று வெளியிடப்பட்ட மாவீரன் திரைப்படத்தை காண அவரது ரசிகர்கள் கூட்டம், திரண்டு வந்து திரையரங்கு முன்பாக வெடி வெடித்து, மேல தாளங்களுடன் ஆடிப்பாடினர்.  அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும், மாவீரன் திரைப்படத்தில் பங்கேற்று நடனமாடிய நடன குழுவினர் திரையரங்கு முன்பாக சிறப்பு நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்யும், விதமாகத்தான் இருக்கும். அதன்படி இப்படத்தில் ஆக்சன், லவ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இன்றி மிஷ்கின், சிவகார்த்திகேயன் இடையில் ஆன காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கின்றது என கூறினர்.


 






அதேபோன்று யோகி பாபு வரும் காட்சிகளும் கலக்கலாக இருக்கிறது. அதிலும் இடைவேளை காட்சியும் அதை தொடர்ந்து வரும் திரைக்கதையும் வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வந்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண