நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன்.22ஆம் தேதி வெளியாகவிருக்கும் நா ரெடி பாடல் பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார்.


லியோ


இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2ஆவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


நடிகர் விஜய் பிறந்தநாள்


வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்ட படக்குழு அன்றைய தினம் லியோ படத்தின் முதல் பாடலாக ‘அல்டர் ஈகோ - நா ரெடி’ வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாடலின் போஸ்டரில் வாயில் சிகரெட்டுடனும் விஜய் இருக்கும் நிலையில் இது ஒரு புறம் சர்ச்சையையும் கிளப்பியது.


இளமையான விஜய்


இதனிடையே நேர்காணல் ஒன்றில் இந்தப் பாடலைப் பற்றிய பல சுவாரஸ்யமான  தகவல்களைப் பகிர்ந்துள்ளார் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார். நா ரெடி திரைப்படத்தில் நடிகர் விஜய் பார்ப்பதற்கு 10 வயது குறைந்து இளைமையாக தோற்றமளிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.


2000 டான்சர்களை வைத்து உருவாகியிருக்கும் பாடல்


இந்த ஒரு பாடல் மொத்தம் 2000 டான்சர்களை வைத்து மொத்தம் 7 நாட்களில் உருவாகியுள்ளது . முன்னதாக எட்டு நாட்களில் எடுக்க திட்டமிடப்பட்ட நிலையில்,   டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் இந்தப் பாடலை ஏழு நாட்களில் முடிக்குமாறு விஜய் கேட்டுக்கொண்டார் என்றும், அதற்காக தனது முழு உழைப்பை கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியதாகவும் லலித் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும், சொன்னதுபோல் ஏழு நாட்களில் இந்தப் பாடலின் படப்பிடிப்பு முடிந்ததாகவும், இதனால் தயாரிப்பு தரப்புக்கு ஒரு கோடி ரூபாய் செலவு குறைந்ததாகவும் கூறியுள்ளார் லலித் குமார். தயாரிப்பாளர்களின் நலனைப் பற்றி சிந்திப்பதில் விஜய் அதிக கவனம் எடுத்துக்கொள்வதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


இந்தத் தகவல்களைக் கேட்டப்பின்பு பாடலின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜூன் 22ஆம் தேதிக்காக மிக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


விஜயின் அடுத்தப் படம்


 லியோ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கை கோர்த்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.