எஸ்.பி.பாலசுப்ரமணியம்


கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கிட்டதட்ட 16 மொழிகளில் மொத்தம் 40,000 பாடல்களை பாடி ஆறு தேசிய விருதுகளை வென்று இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார்.தனது குழந்தைமையான குணத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு நினைவாக நிலைத்து நிற்பவர் எஸ்.பி.பி. யூடியூபில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ஏதாவது ஒரு வீடியோவை எடுத்து எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டு இருக்கலாம். பாடல்களின் வழியாகவோ, நகைச்சுவை வழியாகவோ, அல்லது மனதிற்கு நம்பிக்கை அளிக்கு அவரது சொற்களின் வழியாகவோ ஏதோ ஒரு வகையில்  நம்மை மகிழ்ச்சியாக்கி விடக்கூடியவர். 


எஸ்.பி.பி நகர்


கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பாக அவர் காலமானார். அவர் பாடல்கள் வழி மக்கள் அவரை நினைவு கூறாத நாள் இல்லை என்றே சொல்லலாம். பாடகர் எஸ்.பி.பி நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பகுதியை எஸ்.பி.பி நகர் என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு அரசு விரைவில் முடிவெடுக்கு என எதிர்பார்க்கலாம்.