பாலிவுட் நடிகை க்ரித்த் சனோன் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் க்ரித்தி சனோன் தனது கருமுட்டையை உறையவைத்தது குறித்து பேசியுள்ளார். கட்டாயத்தின் பேரால் பெண்கள் திருமணம் செய்துகொள்வதை விட அறிவியலின் உதவியுடன் விரும்பும்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்

Continues below advertisement

கருமுட்டை உறையவைத்தது குறித்து க்ரித்தி சனோன் 

அந்த பேட்டியில் பேசிய க்ரித்தி சனோன், "நான் குழந்தைகளை விரும்புகிறேன். ஆனால், அதற்காக அவசரப்பட விரும்பவில்லை. நான் உண்மையாகத் தயாராக இருக்கும் நேரத்தில் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதுவரை எனக்கு தேவையில்லாத அழுத்தம் இருக்கக் கூடாது என்பதற்காகவே கருமுட்டையை உறையவைத்தேன்," என்று கூறினார்.

மேலும், அந்த முடிவை எடுத்த பிறகு தனக்கு மிகப்பெரிய மனநிம்மதி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். "அந்த முடிவை எடுத்தவுடன் ஒரு சுமை இறங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது வயது பற்றிய கவலை இல்லாமல் என் வாழ்க்கையையும், வேலையையும் கவனிக்க முடிகிறது," என்று அவர் கூறியுள்ளார்.

Continues below advertisement

தொடர்ந்து பேசிய அவர், இந்த முடிவை யாரும் பயத்தினாலோ அல்லது கட்டாயத்தினாலோ எடுக்கக் கூடாது என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் எடுக்க வேண்டிய தனிப்பட்ட முடிவு இது என்றும் தெரிவித்தார்.

"இது எல்லோருக்கும் பொருந்தும் முடிவு என்று நான் சொல்லவில்லை. ஆனால், எனக்கு அது சரியானதாகத் தோன்றியது. எதிர்காலத்தில் நான் தயாராக இருக்கும் நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பாதுகாத்து வைத்திருக்க விரும்பினேன்," என்று க்ரித்தி சனோன் கூறினார்.

திருமணம் மற்றும் குழந்தைப்பேறு குறித்து சமூகத்தில் நிலவும் எதிர்பார்ப்புகளை விட, ஒருவர் தனது வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்வதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது தனது கவனம் முழுவதும் வாழ்க்கையையும், சினிமா பயணத்தையும் ரசிப்பதில்தான் இருப்பதாகவும், சரியான நேரம் வரும்போது குடும்ப வாழ்க்கை குறித்து முடிவு எடுப்பேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பரம சுந்தரி பாடலின் வழியாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார் க்ரித்தி சனோன்.தமிழிலும் இவருகு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தனுஷுடன் தேரே இஷ்க் மே படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷை விட இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது.