பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு நடிகைகள் திரையுலகத்திற்கு டாட்டா பாய் பாய் சொல்லிவிட்டு குடும்பம் குழந்தை என பிசியாகி விடுவர். சில பேர் ரீ எண்ட்ரி கொடுத்தாலும் அக்கா, அண்ணி , அம்மா என குணசித்திர கதாப்பாத்திரங்களில் மட்டும் நடிப்பர். அதிலும் சிலர், வண்டியை எடுத்துக்கொண்டு நேராக சின்னத்திரை பக்கம் கிளம்பிவிடுவர். இப்படியான சூழ்நிலை முன்னதாக இருந்தது, ஆனால் இந்த காலத்து நடிகைகள், அந்த கருத்தை உடைக்க சினிமாவில் சூப்பர் கம்-பேக் கொடுத்து  வருகின்றனர்.அப்படியாக, மாமியார் வீட்டில் வலது கால் எடுத்து வைத்த பின்னர், சினிமா உலகிற்கு இடது கால் வைத்த நடிகைகளை பற்றி பார்ப்போம்.


நடிகை ஜோதிகா :


காக்க காக்க படம் வெளிவந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்தார் ஜோதிகா. பின்னர் 2006 ஆம் ஆண்டு சூர்யாவை மணந்தார். அதையடுத்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சினிமா உலகிற்கு ஹாய் சொல்லியிருக்கிறார்.






2015-ல் வெளிவந்த 36 வயதினிலே படத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அந்த நாள் முதல், பெண்களை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களிலே நடித்து வருகின்றார். சமீபத்தில் சூர்யாவும் இவரும் தேசிய விருது பெற்றனர். அது தொடர்பான பல புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. 


நடிகை காஜல் அகர்வால் :




தெலுங்கு,தமிழ் என கொடி கட்டி பறந்த நாயகி காஜல், திரையுலகில் உள்ள அஜித், விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பின் பல நடிகைகள் மார்கெட்டில் வர, அவரின் மவுசு சற்று கீழே இறங்கியது.2020-ல் தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை மணந்தார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நீல் கிட்சுலு என்று பெயர் சூட்டினார். தற்போது, கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.



நடிகை ஸ்ரேயா சரண் :




 


என்றும் இளமை குறையாத ஸ்ரேயா பெயரை கேட்டாலே, மியாவ் மியாவ் பூனா, வாஜி வாஜி, என சூப்பர் பாடல்கள்நியாபகம் வரும்.  வெளிநாட்டுகாரர் ஒருவரை மணந்து இவருக்கு ராதா எனும் பெண் குழந்தை உள்ளது. தற்போது, த்ரிஷ்யம் 2வில் ( ஹிந்தி) நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிவுள்ளது 



நடிகை லைலா : 




2000’களில் களைக்கட்டி வந்த நடிகை லைலா. நந்தா, பிதாமகன், தீனா, தில் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டின் க்யூட்டியாக வளம் வந்தார். மெளனம் பேசியதே படத்தில் கடைசி 5 நிமிடங்களில் வந்தாலும் “ உன் கண்ணு ரொம்ப அழகு இருக்கு கெளதம்” என டைலாக் பேசி அனைவரையும் கவர்ந்தார். திருமணம் ஆகி சில ஆண்டுகளுக்கு பிறகு, சர்தார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார். இப்படம் 21 ஆம் தேதி அக்டோபர் வெளியாகவுள்ளது.



சிம்ரன் : 




90களில் தொடங்கி 2K வரை இளைஞர்களை கட்டிப் போட்டவர். யூத் படத்தில் விஜயுடன் நடனம் ஆடி, இடை அசைவின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார் சிம்ரன். 2003 -ல் தீபக் என்பவரை மணந்தார். பின், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் மாளினியாக அசத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சீமராஜாவில் சமந்தாவின் சின்னம்மாவாக நடித்து வில்லி கெட்-அப்பில் மிரட்டினார். சமீபத்தில், ஆர்யாவின் கேப்டன் படத்தில் நடித்தார்,