ThiruSelvam | களத்தில் குதிக்கும் 'கோலங்கள்' ஹீரோ..! புதிய சீரியலில் களம் இறங்கும் திருச்செல்வம்!

மக்கள் நாயகியாக தேவயானி, அதிரடி திருப்பங்கள், சலிப்பூட்டாத கதை என வெற்றி சீரியலாக கோலங்களை எடுத்து முடித்தார் திருச்செல்வம்

Continues below advertisement

கோலிவுட்டின் எவர்கிரீன் நாயகியாக இருந்தவர் தேவயானி. பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். நடிகை என்றாலே க்ளாமர்தான் என்ற விதியை உடைத்து க்யூட் நடிப்பின் மூலம் திரையுலகை ஆண்டவர். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த தேவயானி திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு இடைவெளி விட்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரை மூலம் எண்ட்ரி கொடுத்தார் தேவையானி. 

Continues below advertisement

சன் டிவியில் கோலங்கள் என்ற தொடரின் மூலம் மாஸாக சின்னத்திரைக்குள் வந்த இவர், தமிழக குடும்பங்களை கட்டிப்போட்டார். மிகவும் பிரபலமான கோலங்கள் தொடர் 3 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பானது. இந்த தொடரை இயக்கியவர் திருச்செல்வம். அதே தொடரில் இயக்குநர் திருச்செல்வமும் நடித்திருப்பார். 

மக்கள் நாயகியாக தேவயானி, அதிரடி திருப்பங்கள், சலிப்பூட்டாத கதை என வெற்றி சீரியலாக கோலங்களை எடுத்து முடித்த திருச்செல்வம் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளார். கோலங்கள் ஒளிபரப்பான அதே சன் டிவிக்கு மீண்டும் ஒரு சீரியலை இயக்கவுள்ளார் திருச்செல்வம். எதிர்நீச்சல் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் சன் டிவியில் பிப்ரவரி 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. 

அப்பா - மகளுக்கு இடையேயான அன்பையும், அதனைச் சுற்றி நடக்கும்  பாசப்போராட்டத்தையும் மையமாக வைத்து எதிர்நீச்சல் சீரியல் இருக்குமென தெரிகிறது. இது தொடர்பான ப்ரோமோக்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement
Sponsored Links by Taboola