கிருத்திகா உதயநிதி :


வணக்கம் சென்னை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்  கிருத்திகா. முதல்வர் ஸ்டாலினின் மருமகளும் , உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா, பிரபலம் என்ற அந்தஸ்தை பெற போராட தேவையில்லை என்றாலும், தனது சொந்த முயற்சியால் படங்களை இயக்கி கவனம் பெற்றவர்.
இறுதியாக கிருத்திகா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு , விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.தற்போது ஒடிடி தளத்திற்காக திரைப்படம் ஒன்றை எடுத்து முடித்திருக்கிறார்.






பேப்பர் ராக்கெட் :


தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் “பேப்பர் ராக்கெட்”. இப்படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்க இவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இவர்களுடன் கௌரி கிஷன், பூர்ணிமா பாக்யராஜ்,விஜி சந்திரசேகர்,ரேணுகா கருணாகரன், சின்னி ஜெயந்த், நிர்மல் பலழி,  ஜிஎம் குமார்,  லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர். படம் ஜீ5 தளத்திள் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தில் இறப்பை கொண்டாட வேண்டும் . இறந்தவர்களின் இழப்பையே நினைத்துக்கொண்டு நமது வாழ்க்கையை தொலைக்கக்கூடாது என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறாராம் கிருத்திகா.







குழந்தைகளை பற்றி கிருத்திகா :


சமீபத்திய நேர்காணலில் கிருத்திகா தனது மகன் மற்றும் மகள் குறித்து பகிர்ந்துக்கொண்டார். மகன் இம்பநிதி தற்போது 12 வகுப்பை முடித்துவிட்டு , கல்லூரி செல்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். தமிழ் படங்களையெல்லாம் நண்பர்களுடன் தற்பொழுதுதான் பார்க்க தொடங்கியிருக்கிறார். சில படங்களை பார்த்துவிட்டு கிருத்திகாவிடம் நான் ஹீரோவாக நடிக்கவா என கேட்பாராம். அதற்கு கிருத்திகா நீ முதலில் கல்லூரி படிப்பை முடி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறுவதாக தெரிவிக்கிறார். மகனின் விருப்பம் என்னவாக இருந்தாலும் அதுவாகவே ஆகட்டும் என்கிறரார் கிருத்திகா. மகள் தன்மயா தற்போது 6 ஆம் வகுப்பு படிக்கிறாராம். அவள் அப்படியே என்னை போல. சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் . 






அன்பில் மகேஷ் , உதயநிதி நட்பு ப்ற்றி:


அன்பில் மகேஷ்  மற்றும் உதயநிதி இருவருமே சிறுவயது முதலே நண்பர்கள் . அவர்களுடனே பயணித்தவர்தான் கிருத்திகாவும். கிருத்திகா மற்றும் உதயநிதி இருவரும் காதலித்த சமயத்தில் ,உதயநிதியுடன் கிருத்திகாவை சந்திக்க அன்பில் மகேஷும் செல்வார் என அவர் நேர்காணலில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து கிருத்திகா கூறுகையில் “ எங்கள் இருவருக்கும் ஏதாவது சண்டை என்றால் அதனை மகேஷ்தான் தீர்த்து வைப்பார். எங்களுடனே வெகு காலமாக பயணிக்கிறார் அவர் “ என்றார்.