பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவாக இருக்கும் கே.ஜி.எஃப் 3 படத்தில் நடிகர் பிரபாஸூம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் பாகம் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம், விரைவில் 1000 கோடியை எட்ட இருக்கிறது.






இந்தப்படத்தின் 3 ஆம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதில் நடிகர் யஷ்ஷூடன் நடிகர் பிரபாஸ் சில காட்சிகளில் இணைந்து நடிக்க உள்ளதாகவும் இந்தப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும்  ‘சலார்’ படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 



                                                         


முனனதாக இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


 






புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.