சர்வதேச அளவில் மிக பெரிய கவனத்தை ஈர்த்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’. கேஜிஎஃப் முதல் பாகம் முடியும் போதே இரண்டாவது பாகத்தின் லீட் உடன் அது முடிவடைந்திருக்கும். இந்நிலையில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த கேஜிஎஃப் முதல் பாகத்தை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இந்தியளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்திற்கான டீசர் மட்டும் வெளியாகி, ஒரே நாளில் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.






இதில் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறுக்கே வந்த கொரோனாவால் எல்லாம் மாறிபோனது. 




இந்நிலையில் கேஜிஎஃப் ரசிகர்களை குழிப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் அதீராவாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை அடுத்து கையில் வாளுடன் அதீரா நடந்துவரும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். போஸ்டர் குறித்து கருத்து பதிவிட்டுள்ள சஞ்சய் தத், பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். கேஜிஎஃப்க்காக பணியாற்றுவது ஆச்சரியமானது. நீண்ட காலமாக இப்படத்தைப் பார்க்க அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் காத்திருப்புக்கு நிச்சயம் தகுந்த படமாக கேஜிஎஃப் இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்