எடவேல பாபு கைது


மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு குழு விசாரணைக்குப் பின் அவர் மீது காவல் துறை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடவேல பாபு ஏற்கனவே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றிருப்பதால் விடுவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன