தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி - நடிகர் தனுஷ் கூட்டணியில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக தயாராக உள்ள திரைப்படம் 'வாத்தி'/ 'சார்'. ரிலீசுக்கு காத்திருக்கும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமணம் ஹைதரபாத்தில் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தனது கிளாமர் உடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் புதுமண தம்பதிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். பதிவிட்டது முதல் ஏராளமான கமெண்ட்களை குவித்து வருகிறது கீர்த்தி சுரேஷின் போஸ்ட்.


 



 


ட்ரோல் செய்யப்படும் கீர்த்தி சுரேஷ் :


எந்த அளவிற்கு கவனத்தை ஈர்த்தாரோ அதை விட பல மடங்கு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். காரணம் அவரின் ஜிங்கு சா ஜிங்கு சா உடை தான். அவர் போஸ்ட் செய்த  புகைப்படங்களுக்கு கமெண்ட் மூலம் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். என்ன மா டென்ட் கொட்டாய் போல ஒரு டிரஸ். கல்யாணத்துக்கு இப்படியா டிரஸ் மாட்டிட்டு வருவாங்க.



 


ஷாமியான துணியில் டிரஸ் தைத்து போட்டு இருக்கீங்க என்றுள்ளனர். ஒரு சிலரோ இன்னும் ஒரு படி மேலே போய் ஜம்காலம் மாதிரி இருக்கு, நீங்க என்ன பஞ்சவர்ண கிளியா என நக்கலடித்து கமெண்ட் மூலம் மரண கலாய்களாக அடுக்கிக்கொண்டே போகிறார்கள் நெட்டிசன்கள். 


 






 


வெங்கி அட்லூரி இயக்கிய படங்கள் :


ஒரு நடிகராக அறிமுகமான வெங்கி அட்லூரி 2018ம் ஆண்டு வெளியான 'தொலி பிரேமா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'மிஸ்டர் மஜ்னு' மற்றும் 'ரங் தே' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானார். அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றான 'ரங் தே'. படத்தில் நடிகர் நிதின் ஹீரோவாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நிதின் அவரது மனைவி ஷாலினியும் இயக்குனர் வெங்கி அட்லூரி திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  






வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள 'வாத்தி' / 'சார்' திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 4ம் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் அவரால் வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தொலைபேசி மூலம் புதுமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதாக கூறப்படுகிறது.