கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பாபிசிம்ஹா, சித்தார்த் லட்சுமிமேனன், உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகிர்தண்டா. மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. படத்தில் பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்களிடம் கார்த்திக் சுப்புராஜ் வேலை வாங்கியிருந்த விதமும், சந்தோஷ்நாரயணனின் இசையும் திரைவட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டது. 


 






இந்தப்படத்தை தொடர்ந்து  ‘இறைவி’ ‘மெர்க்குரி’ ‘ பேட்ட’  ‘மகான்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர் மீண்டும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிவித்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று வந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகினர். இதனிடையே இந்தப்படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.


 






இந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது புதிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், ஜிகிர்தண்டா 2 படத்தின் போஸ்டரோடு, படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்கள் மற்றும் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.