பிறந்தபோது பெயர் குறித்த சச்சரவு தொடங்கி இன்று வரை நடிகை கரீனா கபூரின் மூத்த மகன் தைமூர் அலி கான் மீடியா வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார்.


பெயர் சர்ச்சை


தற்போது நான்கு வயது நிரம்பியுள்ள தைமூர் அலி கானின் புகைப்படங்களை கரீனா கபூர் ஒவ்வொரு முறை பகிரும்போதும் அவை இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.




இந்த நிலையில், முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடன் முகத்தை மறைத்தவாறு தைமூர் உடன் இருக்கும் புகைப்படத்தை கரீனா பகிர்ந்துள்ளார்.


’அப்படியே அப்பா மாதிரி...’


”ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இன்று என்னைப் பார்க்க வந்த கடைசி நபர். கோடை விடுமுறைக்கு தயாராக உள்ளார். அப்படியே தன் அப்பாவைப் போல... ஃபோட்டோ எடுக்க என்னை விடவில்லை” எனக் குறிப்பிட்டு கரீனா புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.






 


தைமூர் அலி கான் பிறந்தபோது, இந்தியா மீது படையெடுத்து வந்து டெல்லியை சூறையாடிய நாடோடி முகாலய மன்னர் தைமூர் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. சைஃப் அலி கான் முகலாயர்களின் குறுநில ஆட்சியாளர்களாக விளங்கிய பட்டோடி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்தப் பிரச்னை பூதாகரமாகியது.


அதனைத் தொடர்ந்து இப்பெயர் ஒரு பெர்சிய மொழிப்பெயர் என்றும் இப்பெயருக்கு கடினமாக இரும்பு என அர்த்தம் எனவும் கரீனா கபூர் - சைஃப் அலி கான் தம்பதியினர் விளக்கம் அளித்தனர். ஆனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இத்தம்பதியினர் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். 


 






கடந்த ஆண்டு பிறந்த தங்கள் இரண்டாவது குழந்தைக்கு இத்தம்பதி ஜெ அலி கான் எனப் பெயர் சூட்டினர். இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகும் கரீனா தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


நடிகர் அமீர் கானுடன் கரீனா நடித்துள்ள ’லால் சிங் சத்தா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.