சூர்யாவின் கங்குவா


சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தனது கரியர் முழுக்க பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சூர்யா. ஒரு பக்கம் சிங்கம் என்றால் இன்னொரு பக்கம் ஜெய்பீம் என மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்சு செய்து நடிப்பது குறித்து சூர்யா பேசியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஒரு அட்வைஸ்தான் தனது மனதில் இன்று வரை ஓடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்


சூர்யாவுக்கு ரஜினி கொடுத்த அந்த அட்வைஸ்


கங்குவா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட சூர்யா இப்படி பேசினார் " எப்படி சிங்கம் படத்தில்  நடித்துவிட்டு ஜெய் பீம் மாதிரியான ஒரு படத்தில் என்னால் நடிக்க முடிகிறது என என் மகள் என்னிடம் ஒரு முறை கேட்டார். 20 வருடங்களுக்கு முன் ரஜினி சார் என்னிடம் போகிற போக்கில் சொன்ன வார்த்தை தான் என் மனதில் இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. நீ ஒரு ஹீரோ மட்டுமில்ல ஒரு நடிகனும் கூட. அதனால் நீ ரெண்டையும்  பேலன்ஸ் பண்ணனும். ஒரு ஆக்‌ஷன் படம் அடுத்து ஒரு ஆக்‌ஷன் படம் என்று நீ எஸ்கேப் ஆகிட முடியாது என்று அவர் என்னிடம் சொன்னார். அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. என்னால் சிங்கம் மாதிரியான ஒரு கதாபாத்திரத்திலும் ஜெய் பீம் மாதிரியான ஒரு படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் லக்கி என்றுதான் சொல்ல வேண்டும். 


கங்குவா படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் சிவா தியேட்டர் மொமண்ட்ஸை ரொம்ப ரசிப்பார். சில நேரங்களில் ஒரு காட்சி எப்படி வரும் என்று என்னால் கனிக்க முடியாது. ஆனால் சிவா சார் இந்த காட்சியை தியேட்டரில் பாருங்கள் என பயங்கர நம்பிக்கையாக இருப்பார். பெரும்பாலான படப்பிடிப்பு கிரீன் மேட் அல்லது ப்ளூ மேட் பின்னணியில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் சிவா நம்மைச் சுற்றி நடக்கும் உலகத்தைப் பற்றி நம் கண் முன்னாள் சொல்லியே உருவாக்குவார். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது.




மேலும் படிக்க : Suriya : 6 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியிருக்கோம்...அகரம் சேவை இல்லை பொறுப்பு..சூர்யா செம ஸ்பீச்


Suriya : "நாம பயப்படும்போது தான் குதிக்கனும்...அப்படியான கதையை தான் தேர்வு செய்கிறேன்" - சூர்யா