சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது நீண்ட நாள் காதலி கியாரா அத்வானி ஆகியோரை வாழ்த்தி பதிவிட்ட கங்கனா ரனாவத் ஒட்டுமொத்த பாலிவுட் கலைஞர்களையும் மறைமுகமாக தாக்கி ஒரு வரியை எழுதி உள்ளார். 


சித்தார்த் - கியாரா திருமணம்


எல்லோருடைய கண்களும் தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது நீண்ட நாள் காதலி கியாரா அத்வானி மீது விழுந்துள்ளது, இருவருக்கும் நாளை பிப்ரவரி 6 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமண இடமான ஜெய்சால்மருக்குப் புறப்பட்ட மணமகள் பிப்.3 ஆம் தேதி அதிகாலையில் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. இவை அனைத்திற்கும் மத்தியில், சர்ச்சைக்கு பெயர் போன கங்கனா ரனாவத் இந்த ஜோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்தது மட்டுமின்றி, மறைமுகமாக பல பாலிவுட் கலைஞர்களை தாக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 



கங்கனா சர்ச்சை பேச்சுக்கள்


பாலிவுட் நடிகர்கள் மற்றும் கலைஞர்களை கங்கனா புகழ்வது அரிது, அந்தபட்டியலில் உள்ள அதிர்ஷ்டசாலிகள் அனுபம் கெர், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் உள்ளிட்ட சிலர் மட்டுமே. மறுபுறம் அவர், கரண் ஜோஹர், தீபிகா படுகோன், அலியா பட் மற்றும் பெரும்பாலானவர்களுக்கு எதிராகவும் பேசி வெறுப்புகளை கொட்டுவதைக் பார்த்திருக்கிறோம். அவரைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லோரும் 'நேபாட்டிசம் (வாரிசு)' கும்பலைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர் பேசுவது எப்போதுமே சர்ச்சைதான்.


தொடர்புடைய செய்திகள்: Asia Cup 2023: ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுமா? இந்தியா கலந்துகொள்ளுமா? மார்ச்சில் முடிவு தெரியும்!


பதிவில் மறைமுக தாக்குதல்


கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில், விரைவில் திருமணம் செய்யவிருக்கும் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட ஸ்டோரியில், 'வெட்டிங் பெல்ஸ்' ஸ்டிக்கரைப் பயன்படுத்தி இருந்தார். மேலும் அந்த விடியோவுடன், "இந்த ஜோடி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா துறையில் உண்மையான அன்பை அரிதாகவே பார்க்க முடிகிறது. அவர்களை ஒன்றாக பார்ப்பதற்கு தெய்வீகமாக உள்ளது", என்று எழுதி இருந்தார். சினிமாவில் உண்மையான அன்பை பார்ப்பது அரிது என்றுகூறி பலரை ஒட்டுமொத்தமாக விமர்சித்துள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.



பதிலளிக்காத தம்பதியினர்


அதுமட்டுமின்றி, அந்த பதிவில் கங்கனா ரணாவத் ஒரு தீய கண் ஈமோஜியையும் பயன்படுத்தி ஜோடியைக் குறியிட்டார். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் அவரது பதிவிற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. இதற்கிடையில், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அதவானியின் திருமணம் குறித்து பல தகவல்கள் வைரலாகி வருகின்றன. கரண் ஜோஹர், மணீஷ் மல்ஹோத்ரா மற்றும் இஷா அம்பானி ஆகியோர் மொத்தம் 120 பேர் கொண்ட விருந்தினர் பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமணம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் பேலசில் நடைபெறவுள்ளது. இவர்களது திருமணத்தை ஒட்டி, ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக உள்ளனர், மேலும் திருமணமான ஜோடியாக அவர்களின் முதல் போட்டோவை காண காத்திருக்கின்றனர்.