இந்திய திரையுலகின் பன்முக வித்தகராக வலம் வருபவர் கமலஹாசன். உலக நாயகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கமலஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிய பிறகு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கமலஹாசன் தற்போது தனது அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ படத்தை அறிவித்துள்ளார்.






மணிரத்னம் இயக்கத்தில், ஏ. ஆர்.ரஹ்மான் இசையில் கமலஹாசன் நடிக்கும் இந்த படம் அவரது 234வது படம் ஆகும். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பிறகு கமலஹாசன் மணிரத்னத்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்கி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.