புஷ்பா 2 படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றிற்கு பிரபல நடிகை ஒருவரை ஆட வைக்கப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்த படம் புஷ்பா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.






இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கு புஷ்பா தி ரைஸ் என்றும், 2 ஆம் பாகத்திற்கு புஷ்பா தி ரூல் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் ஆன நிலையில் 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. செம்மரக் கடத்தலில் ஈடுபடும் புஷ்பா எப்படி டான் ஆகிறார் என்பதே இப்படத்தின் முதல் பாக கதையாக அமைந்தது. 2ஆம் பாகத்தில் புஷ்பாவின் செல்வாக்கு எப்படி இருக்கும் என தெரிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 






புஷ்பா படத்தின் 2 பாகத்தின் படப்பிடிப்புக்கான பூஜை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் அல்லு அர்ஜூனின் நியூ லுக்குடம் போஸ்டர் ஒன்றும் வெளியானது. இதனிடையே புஷ்பா படத்தில் முதல் பாகத்தில் ஒரு பாட்டுக்கு சமந்தா ஆடிய நிலையில், 2 ஆம் பாகத்தில் யார் ஆடப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.தற்போது அது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த பாடலுக்கு நடிகை காஜல் அகர்வாலை ஆட வைக்கலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.