2023-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இவர்களுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ரிங்கு சிங் தொடர்ச்சியாக இந்து சிக்ஸர்களை அடித்து விளாசி அணிக்கு அபாரமான வெற்றியை பெற்று தந்தார். இந்த அபாரமான வெற்றியால் சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். 


நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேத்தா இருவரும் நடிகர் ஷாருக்கானின் நிறுவனமான ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் இணை உரிமையாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடந்த 2007ம் ஆண்டு இணைந்தனர். எனவே கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் போட்டிகளில் அடிக்கடி ஸ்டாண்டில் அணிகளுக்கு ஊக்கமளித்து வந்தனர். 




ரிங்கு சிங் பற்றி ஜூஹி :


ரிங்கு சிங் சமீபத்தில் அபாரமான ஷாட் குறித்து ஜூஹி பேசுகையில் "ரிங்கு சிங் நம்பமுடியாதவர்".  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  ஒவ்வொரு முறை விளையாடும்போதும் மிகுந்த நடுக்கத்துடன் உணர்வேன். இந்த ரோலர் கோஸ்டர் விளையாட்டு தொடங்கும் போது மிகவும் பதற்றமான ஒரு மனநிலை இருக்கும். உங்கள் குழந்தைகள் ரேஸில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படும். ஒருபோதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தோற்றுப்போவதை விரும்ப மாட்டார்கள் அல்லவா.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கும் அனைத்து பிளேயர்களும் மிகவும் திறமையானவர்கள். நான் என்றும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கூறியிருந்தார்.  


பல ஆண்டு கால நட்பு :


மேலும் ஜூஹி ஒரு அற்புதமான நிகழ்வு ஒன்றை  பரிமாறிக்கொண்டனர். ஜூஹி மற்றும் ஷாருக்கான் இருவருக்கும் இடையில் ஒரு உறுதியான நட்பு 90களின் முற்பகுதியில் இருந்து தொடர்கிறது. தர், யெஸ் பாஸ், டூப்ளிகேட் மற்றும் ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி என ஈரமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலென்ஜெர்ஸ் பெங்களூரு அணி இடையேயான ஐபிஎல் போட்டி சமீபத்தில் ஈடன் கார்டனில் நடைபெற்றது. அந்த விளையாட்டு மைதானத்தில் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா இணைந்து நடித்த "ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி"  படத்தின் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது நான் ஷாருக்கிடம் கூறினேன். இப்படி 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்த பிரமாண்டமான அரங்கில் இந்த பாடல் ஒலிக்கப்படும் என நான் கனவிலும் நினைத்ததில்லை என தெரிவித்தேன்.  நானும் எஸ்ஆர்கேவும் நீண்ட கால நண்பர்கள் ஆனால் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்த கொள்வது மிகவும் அரிதான ஒரு விஷயம். யாரும் இதை நம்பமாட்டார்கள். ஆனால் எனது கணவர் ஜெய், ஷாருக்குடன் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருக்கிறார். 


ஆர்யன் விஷயத்தில் ஜூஹியின் உதவி :


ஷாருக் மகன் ஆர்யன் சமீபத்தில் போதை பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜாமீன் சம்பந்தமாக 1 லட்சம் ரூபாய் ஒப்பந்த பாத்திரத்தில் நான் கையெழுத்திட்டு இருந்தேன். இது போல ஒன்று நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த தருணத்தில் நான் உதவி செய்வதை சரியென உணர்ந்தேன் என்றார்