பாலிவுட் உலகின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவரும் தனது தாயை போல பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ளார். இவர் தான் 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.


மார்பிங் புகைப்படம்:


ஒரு செய்தி நிறுவனத்திற்கு ஜான்வி கபூர்அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ யாஹூவின் முகப்பு பக்கத்தில் என்னுடைய மார்பிங் செய்யப்பட்ட படத்தை கண்டபோது மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்” என்று கூறினார். மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளியில் ஆசிரியர்கள் தன்னை பிடிக்காத வகையில் நடத்தினர் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது, “ அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அதனால் அவர்கள் என்னை வெறுக்க ஆரம்பித்தார்கள். என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. என் நண்பர்கள் என்னை வித்தியாசமாக பார்த்தார்கள். நான் பிரபலமாக இருந்ததால் நான் வேலை செய்ய வேண்டியதில்லை என்று பலரும் கூறினர். நான் ஏன் யாஹூவில் இருந்தேன் என்று பலரும் கேட்டனர்.” இவ்வாறு அவர் கூறினார்.


ஜான்வி கபூர் வேதனை:


இந்த சம்பவத்தால் ஜான்வி கபூர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஜான்வி கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின்பு, மில்லி., கஞ்சன் சக்‌ஷேனா ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார். பாலிவுட் மட்டுமின்றி பல திரையுலகில் உள்ள பிரபல நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்பிங் செய்து அவதூறாக சித்தரித்து இணையதளங்களில் கசிய விடுவதை சில சமூக விரோதிகள் செய்து வருகின்றனர்.


போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்த ஜான்வி கபூர் சிறுவயது முதலே திரை நட்சத்திர பிம்பத்திலே வளர்ந்தவர். இதனால், அவர் எங்கு சென்றாலும் அவரது நடவடிக்கைகள் பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வந்தது. தற்போது 26 வயதாகும் ஜான்வி கபூர் மிஸ்டர் – மிஸ்ஸஸ் மகி, தேவாரா, உலாஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் தேவாரா படம் தெலுங்கு படம் ஆகும். தன்னுடைய நடிப்பிற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.


மேலும் படிக்க: Siragadikka Asai: தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களில் இடம்.. விஜய் டிவியில் நம்பர் ஒன்.. பாக்கியலட்சுமியை ஓவர்டேக் செய்த சிறகடிக்க ஆசை!


மேலும் படிக்க: Vijay Antony: ஞாபகங்கள் தான் வாழ்க்கை.. மறந்துட்டு வாழ்வதில் அர்த்தம் இல்லை.. மனம் திறந்த விஜய் ஆண்டனி!