ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலீஸ் தடைபட்டது. நீதிமன்றத்தில் இருந்து படக்குழு தங்களது மனுவை வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து இன்று இப்படத்தை மறுதணிக்கை குழு பார்வையிட இருந்தன. படத்தை பார்வையிட்ட இரண்டு வாரத்தில் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் பெற்று தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் படம் மறுதணிக்கை குழுவினர் இப்படத்தை பார்வையிடவில்லை. இதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் ரசிகர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த மூன்று மாதங்களாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டாமல் நிலுவையில் இருந்து வருகிறது. படத்தில் பிரச்சனைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி சென்சார் போர்ட் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனால் படக்குழு நீதிமன்றத்தை அனுகியது. ஆனால் நீதிமன்ற விசாரணை படத்திற்கு சாதகாமக அமையாமல் விசாரணை நீண்டபடியே சென்றது. இதனால் படக்குழு படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்து தங்கள் அளித்த மனுவை வாபஸ் வாங்கியது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்த உடனே ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து வருகிறார்கள்
இன்றும் மறுதணிக்கை ஒத்திவைப்பு
இன்று ஜனநாயகன் திரைப்படத்தை மதியம் 2 மணிக்கு 9 பேர் கொண்ட மறுதணிக்கை குழு பார்வையிட இருந்தனர். மறுதணிக்கை செய்து ஜனநாயகன் படத்திற்கு இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தேர்தல் முடிந்த கையோடு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இப்படியான நிலையில் மறுதணிக்கை குழுவில் ஒரு உறுப்பினருக்கு உடன் நிலை சரியில்லாததால் இன்று திரையிடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது என்ன சின்ன பசங்க ஸ்கூலில் சொல்வது போல் காரணம் சொல்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.