ஸ்ரீயை வீட்டை விட்டு துரத்தி விட்டார்களா? அவரின் பெற்றோர் நிலை என்ன - உறவினர் பகிர்ந்த தகவல்!

நடிகர் ஸ்ரீயின் நிலைமைக்கு என்ன காரணம்? அவரின் பெற்றோர் நிலை என்ன என்பது பற்றிய பல தகவல்களை அவரின் உறவினர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

வழக்கு எண் 18/9 என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இந்தப் படத்திற்கு பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இப்போது அவர் இருக்கும் நிலைமையை பார்த்தால் 37 வயதில் அவருக்கு இந்த நிலையா என்று எல்லோருமே கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்ன ஆச்சு என்பது பற்றி பார்க்கலாம். 

Continues below advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீ தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், தனி அறையிலேயே இருப்பதாகவும், அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் இப்பொது ஒரு தகவல் பரவி வருகிறது.


ஸ்ரீ ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட. அவர் ஹைக்கூ, டயானா போன்ற நாவல்கள் எழுதியுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கடைசியாக இறுகப்பற்று என்ற படத்தில் நடித்திருந்தார். அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவர் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பார் என்று கூறப்பட்டது. அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் தலைமுடி ஹேர் கலர் செய்யப்பட்டு  எலும்பு தோலுமாக மாறி இருக்கிறார். அதே போல் சட்டை போடாமல்... மிகவும் ஆபாசமாகவும் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நடிகர் ஸ்ரீயின் உறவினர் தரப்பிலிருந்து விளக்கம் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நீண்ட நாட்களாக ஸ்ரீ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நடித்த படங்களுக்கு இதுவரையில் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், அதனால், அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியில் விரட்டிவிட்டார்கள் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும், அவர் மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மற்றொருவர் கூறியிருக்கிறார். அதோடு, அவரது குடும்பத்தினரும் இப்போது சொல்லிக் கொள்ளும்நிலையில் இல்லை என கூறுகிறார்கள்.


தனக்கு யார் யார் சம்பளம் கொடுக்கவில்லை என்பது குறித்த போஸ்ட் ஒன்றை ஸ்ரீ தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில், அவர் நடித்த வில் அம்பு, இறுகப்பற்று அகிய படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களான Star Film Land, Potential Studios ஆகிய நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு இதுவரையில் கொடுக்கப்படாத சம்பளம் தனக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இப்போது அந்த போஸ்ட் இல்லை என்று கூறப்படுகிறது. வில் அம்பு படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் சுசீந்திரன். மாநகரம் மற்றும் இறுகப்பற்று போன்ற படங்களை எஸ் ஆர் பிரபு தயாரித்திருந்தார். இப்போது இவர்கள் தான் ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்களா? ஸ்ரீயின் நிலைக்கு இவர்கள் தான் காரணமா என நெட்டிசன்கள் வசைபாடி வருகிறார்கள்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola