Minister duraimurugan Speech: “பாமக ஆட்சியை பிடித்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தட்டும்” - அமைச்சர் துரைமுருகன்..!

இலங்கை மக்கள் தமிழகம் வருவது தொடர்பாக பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வட இந்தியருக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசு இவ்வாறு இருந்திருப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிமலை கிராமத்தில் மேல்பாடி ஊராட்சியின் கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவர் நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் . இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி விழாவில் பேசினார்.

Continues below advertisement

நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, “வழக்குகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும் என்பது திமுகவின் நீண்ட நாள் கொள்கை. இப்போது தான் பிரதமர் கூறியிருக்கிறார். அதனை பிரதமர் நிறைவேற்ற வேண்டும். இலங்கை தமிழர்கள் உண்ண உணவின்றி உடையின்றி தப்பி வருகின்றனர். எப்போதுதான் மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறது. 


                                                                       

தமிழக அனைத்து கட்சிகளும் இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டுமென கூறியும் மௌனம் காக்கிறது. ஆனால் வட இந்தியருக்கு பாதிப்பு என்றால் இவ்வாறு இருந்திருப்பார்களா..? “ என்றார் 

மேலும் பேசிய அவர், “6 தடுப்பணைகள் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர கோரியுள்ளார். பாமக ஆட்சிக்கு வந்து பூரன மதுவிலக்கை கொண்டு வரட்டும். புதியதாக 2 மணல்குவாரி துவங்க சுற்றுசூழல் அனுமதி கோரியுள்ளோம்.


                                                       

தொடர்ந்து லாரி உரிமையாளர்களுக்கு மணல் குவாரி  மணல் எடுக்க அனுமதி மறுக்கபடுவது குறித்து கேட்டதற்கு, “அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவில்லை என்றாலும் நேரில் சென்று பணம் கட்டி லாரியில் மணல் வாங்கிகொள்ளலாம். நீர் வளத்துறை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை. ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளது அதனை நிரப்ப நிதி பற்றாக்குறை உள்ளது நிதி கோரியுள்ளோம்” என்று பேசினார்.

Continues below advertisement