கோலிவுட் மட்டுமல்லாது , பாலிவுட் ஹாலிவுட் என கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். குறிப்பாக அம்பிகாபதி திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் அதீத ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் என்ற அந்தஸ்தையும் தனுஷ் பெற்றுள்ளார். பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் தற்போது அக்‌ஷய் குமார் , சாரா அலிகானுடன் இணைந்து அட்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். 


இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்து வெளியாகவுள்ளது. வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேராடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின்ப் புரமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த படத்தின் விளம்பரமாக கரன் ஜாகரின் காஃபி ஷாட்ஸ் வித் கரன் என்ற நிகழ்ச்சியில்  தனுஷ் பங்கேற்றார். அவரிடம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா என்றார். 




அதற்கு பதிலளித்த தனுஷ், நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் குறைவாக பேசுபவன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதனால் இந்த ஷோவுக்கு நான் எவ்வளவு பொருத்தம் என தெரியவில்லை. ஒரு நல்ல பொழுதுபோக்குக்காக காத்திருக்கிறேன் என்றார். அவரிடம் அடுத்த கேள்வியை கேட்ட கரன், ஒரு காலையில் நீங்கள் ரஜினியாக கண் விழித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சிம்பிளாக நச் என பதில் அளித்த தனுஷ், ரஜினி சாரைப்போல நடந்துகொள்வேன் என்றார். அதற்கு கரனும்,ஷாரா அலிகானும் சிரித்தனர். 


முன்னதாக ஒரு நேர்காணலில் ஹிந்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ஷமிதாப் படத்தில் நடித்தீர்கள்? கிட்டதட்ட ஆறு வருடங்கள் ஆகி விட்டது.. ஏன் இவ்வளவு இடைவெளி? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் ‘நான் தமிழில் ஏராளமான படங்களில் நடிக்கிறேன். அதனால்தான் இந்த இடைவெளி. இன்னொன்று எல்லாமும் கூடி வர வேண்டும் இல்லையா.. நல்ல கதை கிடைக்க வேண்டும், நல்ல டைரக்டர் கிடைக்க வேண்டும், அந்த நேரத்தில் எனது டேட்ஸ் ஃப்ரியாக இருக்க வேண்டும்’ என்றார்






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண