அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த பவானி தன் தோழியான நடிகை யாஷிகாவை பார்க்க கடந்த ஜூலை மாதம் சென்னைக்கு வந்தார். யாஷிகாவின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஜூலை 24ம் தேதி யாஷிகா, பவானி மற்றும் இரண்டு பேர் டின்னருக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானதில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்திலேயே பவானி உயிரிழந்ததை உறவினர்கள் யாஷிகா கண்விழித்ததும் தெரிவிக்க வில்லை. மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியதும் ‘பவணி எப்படியிருக்கிறாள்?’ என தன்னுடைய தோழியைப் பற்றி விசாரித்ததாகவும், மருத்துவர்கள் தற்போது தோழியின் மரணம் குறித்து யாஷிகாவிற்கு தெரியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதால், பவணி வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியிருந்தார்கள். சில நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு அந்த செய்தி சொல்லப்பட்டது.



மேலும் தன் தோழி பவானியின் புகைப்படங்கள், வீடியோவையும் வெளியிட்டு செய்தார். பவானி இல்லாமல் தான் உயிர் வாழ்வதே கொடுமையாக இருக்கிறது என்றார். இந்நிலையில் தான் பவானியுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு யாஷிகா கூறியிருப்பதாவது, ”என்னுடைய பெரிய நலன்விரும்பி மற்றும் எனது Soul Sister. ஐ மிஸ் யூ. உன்னை நினைக்காமல் ஒரு நாள் கூட கடத்ததில்லை. மீண்டும் அந்த நேரத்திற்கு சென்று நடந்ததை மாற்ற முடியுமா என நினைக்கிறேன். உன்னை அந்த அளவுக்கு மிஸ் செய்கிறேன்.


எங்களை விட்டு செல்லும் முன்பு நீ கொடுத்துவிட்டு சென்ற நியாபகங்கள்.. அவற்றிற்காக நான் நன்றி கடனை பட்டிருக்கிறேன். நீ இப்போது ஒரு ஏன்ஜல். நீ ஒரு மாணிக்கம், உன்னை நான் உடைத்துவிட்டேன். உன்னையும் நம் நியாபகங்களையும் நான் மிஸ் செய்கிறேன்.


நீ இப்போது இங்கு இல்லை என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. நீ என்னிடம் உணவு, டெசர்ட் பற்றி பேசுவதை நான் மிஸ் செய்கிறேன், உனக்கு மேக்கப் செய்து விடுவதையும் நான் மிஸ் செய்கிறேன். இப்படி அனைத்தையும் மிஸ் செய்கிறேன். நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன், உன்னை விரைவில் வந்து சந்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.



இன்னும் 5 மாதங்களுக்கு தன்னால் நடக்க முடியாது என்றும், படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்தார் யாஷிகா. இதனிடையே யாஷிகா எஸ். ஜே. சூர்யாவுடன் நடித்த 'கடமையை செய்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.