பிக் பாஸ் அல்டிமேட்டின் சமீபத்திய புரோமோவில் இந்தவாரம் யார் எலிமினேசன் ஆகப் போகிறார்கள் என்பது குறித்து வெளியான வீடியோவைப்பார்த்த ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். கடைசி இடத்தில் இருந்த அபினய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசனுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. முதல் சீசனலில் தொடர்ந்து சமீபத்தில் நடந்துமுடிந்த 5 வது சீசன் வரை அதே சண்டை சச்சரவு, காதல், பாசம் என நிகழ்ந்துமுடிந்தது. இந்நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் என்பதை ஆரம்பித்து 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. முன்னதாக 5 சீசன்களில் கலந்துக்கொண்டவர்தான் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருந்தால் சலசலப்பிற்கு பஞ்சமே இல்லை என்று கூறக்கூடிய ஜூலி, வனிதா, தாமரைச்செல்வி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபினய் போன்ற பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஜனவரி கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்தது.





இந்நிலையில் இதுக்குறித்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்  ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் முதல் வாரத்திலேயே வெளியேறுகிறார் என காத்திருந்த நிலையில் தான், வனிதாவுக்கு முன்னதாக அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  மேலும் இந்த வாரத்துவக்கத்தில் குறைவான ஓட்டுகளுடன் ஜூலி தான் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் அபிநய்க்கு எப்படிப்பா? ஓட்டு போடுறீங்க என ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில் தான் ஜூலி முன்னேறியுள்ளார்.


இதனையடுத்து கடைசி அபிநய் தான் அடுத்து எலிமினேட் ஆகப்போகிறார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அவர் காப்பாற்றப்பட்டு வனிதாவும், சுரேஷ் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோடு எதிர்பாரததை எதிர்ப்பாருங்கள் என கமல் தெரிவித்து கடைசியில் வனிதா மற்றும் சுரேஷ்யை தனியாக அமர வைத்து பேசுகிறார். இறுதியில் பிபி அல்டிமேட்டில் சுரேஷ் தாத்தா எலிமினேட் ஆகிறார்.  இவர் பிபி அல்டிமேட்டை விட்டு வெளியே செல்வதை விட எப்படி அபிநய் விட வனிதா அக்காவிற்கு குறைவான ஓட்டுகள் கிடைத்தது எனவும் எப்படி அபிநய் காப்பாற்றப்பட்டார் என்ற கேள்வி தான் அதிகளவில் எழுந்துவருகிறது.





இதனையடுத்து ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துவருகின்றனர். குறிப்பாக ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 ல் அபிநய் பல வாரங்கள் காப்பாற்ற கமல் முயன்றதாகவும் , அதே போல் தான் தற்போதும் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.  இதோடு பிபி ஹவுஸில் நாமினேஷன் வரான், ஒண்ணுமே பண்ணல, சேவ் ஆகுறான். ரிப்பீட்டு என மீம்களை போட்டும் அபிநயை ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் எத்தனை முறை காப்பாற்றப்பட்டாலும் இவரை இதுவரை அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றும் ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.