ஆரம்ப காலம் முதல், சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்யாவிற்கு நிகர் அவரே. பள்ளி பருவத்தில் இருந்தே அறிவுக்கூர்மை மிக்க மாணவனாக விளங்கிய ஆர்யா 2005ம் ஆண்டு வெளியான "உள்ளம் கேட்குமே" என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த ஆண்டே அவர் நடிப்பில் ஒரு கல்லூரியின் கதை மற்றும் அறிந்தும் அறியாமலும் என்ற இரண்டு படங்கள் வெளியாகின. 


அதை தொடர்ந்து கலாப காதலன், பட்டியல் ஆகிய படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய ஆர்யா 2009ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாலாவிடம் அறிமுகமானார். அதன் விளைவாக "நான் கடவுள்" என்ற திரைப்படத்தில் அகோரியாக வாழ்ந்துகாட்டினார். அந்த திரைப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மாபெரும் திருப்பம் என்றால் அது மிகையல்ல.     


அன்று தொடங்கி இன்று வரை சுமார் 15 ஆண்டுகளாக ஜாமி எனப்படும் ஆர்யா தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வளம்வருகின்றார். இறுதியாக சூர்யாவின் காப்பான் படத்தில் தோன்றிய ஆர்யா அதன் பிறகு தனது bachelor வாழ்க்கைக்கு விடைகொடுத்து நடிகை சாயிஷாவை மனம் முடித்தார்.    


அதன் பிறகு தனது மனைவியுடன் அவர் இணைந்து நடித்த படம் தான் 'டெடி'. டிஸ்னி தலத்தில் சில நாட்களுக்கு முன்பு இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தில் தன்னுடன் டெடியாக நடித்த சக கலைஞரை அறிமுகப்படுத்தி உத்வேகம் அளித்துள்ளார் ஆர்யா.