சினிமாவில் பொதுவாக இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறியுள்ளார். அதேபோல பாடகர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் தொடங்கி சினிமாவில் பல தொழில்களில் ஈடுபட்டுள்ள பலரும் பிற்காலத்தில் நாயகர்களாக மாறியுள்ளனர் என்பது யாரும் மறுக்கமுடியாத ஒன்று. இந்நிலையில் பிரபல மக்கள் தொடர்பாளர் திரு. நிக்கில் முருகன் அவர்கள் தற்போது விஜய் ஸ்ரீ இயக்கும் பவுடர் என்ற படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார். 


சினிமா வட்டாரத்தில் எல்லோருக்கும் வண்ணவண்ண சட்டைகளை பார்த்தாலே நிக்கில் முருகன் அவர்களின் நியாபகம் தான் வரும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களிடமும் அவர்களுடைய படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். மேலும் பல படங்களுக்கு அவர் தற்போது மக்கள் தொடர்பாளராக பணியாற்றியும் வருகின்றார். 


<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய சினிமாவில்<br>முதல் முயற்சியாக 5 மொழிகளில் <a >#பவுடர்</a> திரைப்படத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் &amp; இந்தியில் டப்பிங் பேசியுள்ளார்<br>நிகில் முருகன்.<br>டிரைலர் விரைவில்<a >@directorcheran</a> <a >@vijaysrig</a> <a >@Vidya_actress</a> <a >@onlynikil</a> <a >#Sammusic</a> <a >@rpdft</a> <a >@onlygmedia</a> <a >#NikilMurukan</a> <a >#NM</a> <a >pic.twitter.com/ERXSzvuv64</a></p>&mdash; Vijay Sri G (@vijaysrig) <a >March 19, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இந்நிலையில் தாதா 87 படத்தின் மூலம் பிரபலன இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் பவுடர் என்ற படத்தில் அவர் நடிகராக களமிறங்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக களமிறங்கவுள்ளார். இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவும் இயக்குனரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ள இந்த படத்திற்கு, அனைத்து மொழிகளிலும் திரு. நிக்கில் முருகன் அவர்கள் டப்பிங் செய்திருப்பது படத்தின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகின்றது.