நடிகர் கெளதம் கார்த்தியும் நடிகை மஞ்சிமா மோகனும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர் என்று கூறப்பட்ட நிலையில்,மஞ்சிமா இதனை மறுத்து வந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, தங்களது காதலை இருவரும் அதிகாரப்பூர்வமாக  தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர்.


 






அதனைத்தொடர்ந்து இருவருக்கும் கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு உதவியர்களுக்கு நன்றி தெரிவித்து, திருமணம் தொடர்பான புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.


சமீபத்தில் மஞ்சிமா மோகன் தனக்கும், கெளதம் கார்த்திக்கும் இடையே காத மலர்ந்த கதையை பற்றி பேசினார்.  


அவர் கூறுகையில்,  "ஒரு முறை சென்னையில் நான் என் வீட்டு கதவை மூட செல்லும் போது எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் சின்ன காயம் என அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஒரு மாதத்திற்கு பின், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் நான் என் சிகிச்சையை மேலும் தாமதப்படுத்தினால் எனது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவுறுத்தினர். பிறகு நான் அறுவை சிகிச்சை செய்து பல மாதங்கள் படுக்கையிலேயே ஓய்வில் இருந்தேன்


 


என் வாழ்வின் மிகக் கடினமான நேரம் அது!  நான் மனதுடைந்து போய் விட்டேன். என்னை சமாதானப்படுத்த முடியாமல் எனது பெற்றோர்கள் தவித்து போயிருந்தனர். அந்த சமயத்தில் கௌதம் தான் என்னுடன் இருந்தார். தேவராட்டம் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த சம்பவத்திற்கு பின் அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாறிவிட்டார். என்னுடைய பெற்றோர்களும் அவரை மிகவும் விரும்புகின்றனர்" என்று பேசினார். மேலும் திருமணத்திற்கு பின், விரைவில் வேலைக்கு திரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.