'சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொன்னேன்....கிளுகிளுப்பாக இருந்தது..’ - ஜி.பி. முத்து கலகல பேட்டி

"சன்னி லியோன் கூட நடித்தது மகிழ்ச்சி, என்னை க்யூட் என்றதால் கிளுகிளுப்பாக இருந்தது. நண்பர்களுக்காகவும், உங்களது ஆசைக்காகவும் தான் சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டினேன்."

Continues below advertisement

சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொன்னேன். அவங்க க்யூட்ன்னு சொன்னாங்க எனக்கு ஒரே கிளுகிளுப்பாக ஆகிவிட்டது என ஜி.பி. முத்து தெரிவித்தார்.

Continues below advertisement

கோவை வ.உ.சி மைதானம் அருகே ஒரு கடை திறப்பு நிகழ்ச்சிக்கு டிக் டாக் பிரபலமான ஜி.பி. முத்து வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு ஜி.பி. முத்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “என்னுடைய மகனுக்கு சுகம் இல்லாத காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியே வந்தேன். பையன் நினைப்பாக இருந்ததால் பிக் பாஸில் இருந்து வந்தேன். தற்போது பையனுக்கு பிரச்சனையில்லை. நார்மலாக இருக்கிறான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நன்றாக தான் இருந்தது. ஜாலியாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கமல்ஹாசனை பார்த்தது மகிழ்ச்சி. 

தற்போது 5, 6 படங்கள் நடித்து கொண்டு இருக்கிறேன். 3 படங்கள் முடிந்து விட்டது. சன்னி லியோன் கூட நடித்தது மகிழ்ச்சி, என்னை க்யூட் என்றதால் கிளுகிளுப்பாக இருந்தது. நண்பர்களுக்காகவும், உங்களது ஆசைக்காகவும் தான் சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டினேன். சன்னி லியோன் பேசியது புரியவில்லை. சன்னி லியோன் நல்ல பாசமாக இருந்தார்கள். அவர் பேசியது புரியவில்லை. டப்பிங் பண்ணினார்கள்.


செத்தப்பய, நாரபய என்பது எங்க ஊரின் வட்டாரப் பேச்சு. அது கெட்ட வார்த்தை கிடையாது. யார் என்ன சொன்னாலும், இது தான் என்னுடைய பேச்சு. இப்படி தான் பேசுவேன். பிக் பாஸ் நல்ல நிகழ்ச்சி நீண்ட நாட்கள் இருக்க முடியவில்லை. ஐ லவ் யூ கெட்ட வார்த்தை கிடையாது. ஐ லவ் யூ என்பது அன்பான வார்த்தை. சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொன்னேன். அவங்க க்யூட்ன்னு சொன்னாங்க” எனத் தெரிவித்தார்.

கோவையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன்  உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, ”இதுவரை தான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன்” என பதிலளித்தார்.

டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஜி.பி முத்து. இவர் செத்த பயலே நாரப் பயலே என அவரது ஊர் பேச்சுவழக்கில் பேசி வெளியிட்ட வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகிக் கொண்டேயிருந்தது. இவரது இயற்கையான பேச்சு பலருக்கும் பிடித்துப் போக, சொந்தமாக யூடியூப் சேனலே ஆரம்பித்துவிட்டார். பல நாட்களாக சமூக வலைதளங்களில் கன்டன்ட் கிடைக்காமல் சுற்றும் மீம் கிரியேட்டர்களுக்கு மீம்ஸ் மெட்டீரியலாகவும் மாறிவிட்டார். இவருக்கு, உலகின் மூலை முடுக்குகளிலிருந்து பலரும் லெட்டர் மற்றும் பரிசுகள் அனுப்புவதும், அதை இவர் அன்பாக்ஸிங் செய்து வீடியோக்களை வெளியிடுவதும் வழக்கம். இப்படி தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி கொண்டிருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் தனது மகனுக்கு உடல்நிலை காரணமாக அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola