1.மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...
‛‛எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்உன்னை என்னையல்லால்வேறு யார் அறிவார்எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்உன்னை என்னையல்லால்வேறு யார் அறிவார்பாவையின் பதம் காண நாணமாபாவையின் பதம் காண நாணமாஉந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமாஉந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமாமாலவா வேலவா மாயவாஷண்முகா...’’
பத்மினி பாடல் என்றால், இது தான் பிள்ளையார் சுழியாக இருக்கும். இந்த பாடலுக்கு அடுத்து தான் மற்ற பாடல்கள் வரும். கண்ணதாசனின் அற்புதமான வரிகளில் கே.வி.மகாதேவனின் இசையில், தில்லானா மோகனாம்பாள்!
2.கண்ணும் கண்ணும் கலந்தே...
‛‛சாதுர்யம் பேசாதேடிஎன் சலங்கைக்கு பதில் சொல்லடிசாதுர்யம் பேசாதேடிஎன் சலங்கைக்கு பதில் சொல்லடிநடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடிநடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடிஆடும் மயில் எந்தன் முன்னேஎன்ன ஆணவத்தில் வந்தாயோடிபாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டுபடமெடுத்து ஆடேதடிநீ படமெடுத்து ஆடேதடிஇன்னொருத்தி நிகராகுமோஎனக்கின்னொருத்தி நிகராகுமோஇடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணேஇன்னொருத்தி நிகராகுமோ!
பாரதப் போர் பார்த்த நமக்க பரதப் போரை கண் முன் கொண்டு வரும் நடனப்போட்டி இந்த பாடல். வஞ்சிக்கோட்டை வாலிபனில் வாழ்ந்திருப்பார் பத்மினி.
3.அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்...
‛‛உடல்நான் உரம் நீ -ம்ஹூம்..உடல் நான் அதில் உளம் நீஎன உறவு கொண்டோம் நேர்மையால்கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம்ப்ரேமையால்குணம் நிறை மாற்றறியா பொன்னேசொல் ஏன் ஜாலம்போனால் வராது இது போலகாலம் இனி..’’
தெய்வப்பிறவி படத்தில் நடிகர் திலகத்துடன் காதல் கசியும் பாடல். ஆர்.சுதர்சன் இசையில், உடுமலை நாராயண கவி எழுதிய பாடல்.
4.எம்.ஜி.ஆர்., ஆடிய ஒரே பரதம்!
இது மன்னாதி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர்., பத்மினி இருவரும் சேர்ந்து ஆடிய பாடல். வரிகள் இல்லாத இசை மட்டுமே இருக்கும். பத்மினி போன்ற நடனபேரொளியோடு எம்ஜிஆர் ஆடியிருப்பார். அதுவும் பரதம். இந்த அளவிற்கு எம்.ஜி.ஆர்., வேறு எந்த பாடலிலும் ஆடியதில்லை.
5.இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே...
‛‛துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலேஇன்பதீபம் உன் ரூபம் தான் மாமயிலே வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒருஎல்லையில்லா இன்பம் அலை மோதுதேதென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதேஅன்பில் ஊறும் மெய்க்காதல் போலே பாரிலேஇன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரேகன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதேஎன்னைக் கண்டு மௌன மொழி பேசுதேதென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதேஎண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே...’’
அழகிய உரையாடல் போலச் செல்லும் இந்த பாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜி.ராமநாதன் இசையில் உருவான இனிமையான பாடல். கண்ணுக்கு குளிர்ச்சியான ஈஸ்ட்மென்ட் கலரில் பார்க்கவும், கேட்கவும் இனிமை ரகம்!
மேலும் படிக்க: ‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!