பீரியட் கேப்பிற்கு ஏற்ற மாதிரியாக ரசிகர்களின் ரசனையும் , நடிகைகளின் தேர்வும் மாறிவிகிறது. அந்த வகையில் 90’ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தமான நடிகையாகியிருக்கிறார் பூஜா ஹெக்டே.  பூஜா தற்போது படு பிஸியாக தமிழ் , தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். பீஸ்ட் உட்பட ஐந்து படங்கள் இவரது நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ராதே ஷ்யாம் திரைப்படத்தில் பிரபாஸுக்கும் , இவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பூஜா ஹெக்டே , பிங் வில்லா இணையதளத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார்.






அதில் பிரபாஸுடன் தான் மீண்டும் நடிக்க இருப்பதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். “பிரபாஸ் தற்போது அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் அவருடன் நடிப்பேன் என நம்பிக்கை இருக்கிறது" என்றார். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான அல்லு அர்ஜுன் நடித்த ஆலா வைகுண்டபுரம்லூ மற்றும் மகேஷ் பாபுவுடன் SSMB28 குறித்து பேசிய பூஜா ஹெக்டே.. “அல்லு அர்ஜூனுடன் இரண்டாவதாக நான் படம் நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அது தானாகவே நடந்தது. புட்ட பொம்மா பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது” என்றார்.


தன்னுடன் நடித்தவர்களை ஒரே வார்த்தையில் விவரிக்கும் பூஜா, நாக சைதன்யாவை 'இனிமையானவர்' என்றும் அல்லு அர்ஜுன் 'மென்மையானவர் மற்றும் ஸ்டைலானவர்' என்கிறார். அதே போல தளபதி விஜய்யை 'உபர் கூல்' என்றும் சிரஞ்சீவியை 'full hearts' என்றும் தன்னுடன் பழகிய அனுபவம் மூலம் பகிர்ந்திருக்கிறார்  பூஜா ஹெக்டே.