லால் சிங் சத்தா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கும் காரணத்தால் படத்தின் ப்ரோமோஷனுக்காக அமீர் கான் மற்றும் கரீனா காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி உள்ளனர். 


அமீர் கான் விவாகரத்து


பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வரும் அமீர்கான் தனது முதல் மனைவி ஆன ரீனா தத்தாவை கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அமீர்கான் லகான் திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலானது. அதனையடுத்து இருவரும் 2005 இல் திருமணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்தான பிறகு எதையும் மறைக்காமல் வெளிப்படையாக இருவரும் அறிவித்து இருந்தனர். தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அது குறித்து இன்னும் வெளிப்படையாக பேசி உள்ளார் என்பது ப்ரோமோவில் தெரிகிறது.



காபி வித் கரண்


அமீர் கான் மற்றும் கரீனா கலந்துகொள்ளும் இந்த காபி வித் கரண் நிகழ்ச்சி நாளை ஹாட்ஸ்டாரில் வெளியாகும். இந்த நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து கரண் ஜோஹரை கலாய்த்து தள்ளியுள்ளார்கள் என்பது ப்ரோமோக்களில் தெரிகிறது. இவர்கள் இருவர் நடிப்பிலும் வெளியாக இருக்கும் பால் சிங் சத்தா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள் : மீண்டும் ஒரு போரா? தைவானில் கால்பதித்த நான்சி பெலோசி! சீறும் சீனா.. உச்சக்கட்ட பதற்றம்.


லால் சிங் சத்தா


ஹாலிவுட்டில் 1994 ஆம் வருடம் வெளியாகிய  ஃபாரஸ்ட் கம்ப் படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த படத்தில் நடிகர் டாம்ஹாங்க்ஸ் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி இப்போது பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்து உள்ளார். அத்துடன் கரீனா கபூர், நாக சைத்தன்யா போன்றோர் முக்கிய வேடங்களில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ஒரே குடும்பம்தான்


கரண் தனது மனைவியை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்க, "எனக்கு கடினமான உணர்வுகள் எதுவும் இல்லை. அவர் மீது பெரிய மரியாதை இருக்கு, பிரிந்தாலும் நாங்கள் எப்போதும் ஒரே குடும்பம்தான். நாங்கள் ரெண்டு பேரும் வெவ்வேறு வேளைகளில் பிஸியாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் உண்மையான அக்கறை, அன்பு மற்றும் மரியாதை இப்போதும் நிறைய இருக்கிறது," என்று அமீர் கான் கூறினார்


பாலியல் வாழ்க்கை


முன்னதாக, காஃபி வித் கரண் 7-இன் ப்ரோமோவில், கரண் கரீனாவிடம் குழந்தைகளைப் பெற்ற பிறகு பெறும் உடலுறவின் தரம் எப்படி உள்ளது என்று கேட்டார். கரீனா அதற்கு "உங்களுக்கே தெரியும்" என்று பதிலளித்தார். கரண் ஜோஹருக்கும் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர் என்பதால் அப்படி பதில் கூறி உள்ளார். அம்மா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பதால் இதுபோன்ற விஷயங்களை பேச முடியாது என்றும் கூறினார். இடையே நுழைந்த அமீர்கான், "மற்றவர்களின் பாலியல் வாழ்க்கையைப் பற்றி பேசுவதை உங்கள் அம்மா பாக்க மாட்டாங்களா? என்று கேட்டு லாக் செய்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.