Ethirneechal Serial: விறுவிறுப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நடந்தது என்ன தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது மிகவும் சஸ்பென்சாகவே உள்ளது.

Continues below advertisement

 

Continues below advertisement

சன் டிவியில் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். சில தினங்களுக்கு முன்னர் தான் ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பதால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

அப்பத்தாவிடம் இருந்து 40% பங்கை ஜீவானந்தம் பத்திரம் மூலம் பெற்றுவிட்டார். ஜனனி புத்திசாலித்தனமாக ஏற்பாடுகளை செய்தும் ஜீவானந்தம் அதை எல்லாம் துவம்சம் செய்து காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றி கொண்டார். குணசேகரன் இந்த காரியத்தை செய்யவில்லை என்றால் யார் இதை செய்து இருப்பார் என்ற குழப்பம் ஒரு பக்கம் இருக்க அதிரை திருமண டென்ஷன் மறுபக்கம்.

 

அருண் - ஆதிரை திருமணம் எப்படி நடக்க போகிறது என்பது பற்றியே கதைக்களம் சுற்றி வருகிறது. ஏற்கனவே அப்பத்தாவின் கைரேகையை எடுக்க முடியாததால் கடுப்பில் இருக்கும் குணசேகரன், அதிரை - கரிகாலன் திருமணமும் சொதப்பினால் என்ன நடக்கும் என்பது மிகவும் சஸ்பென்ஸாகவே உள்ளது. 

ஜனனி தனது நண்பர் கௌதம் மீது முழுநம்பிக்கையுடன் இருக்கிறார். அருணை நிச்சயமாக கோயிலுக்கு அழைத்து வந்து விடுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் அவர் ஒரு வேலை ஜீவனாந்தம்  விசுவாசியாக இருப்பதால் இந்த திருமணம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

 

கௌதமை ஒரு கும்பல் பின்தொடர்கிறது.குறித்த நேரத்தில் அருணை, கெளதம் கோயிலுக்கு அழைத்து செல்வனா? போலீஸ் ஒரு பக்கம் ஜீவானந்தத்தின் கும்பலை தேதி வருகிறது. அந்த வலையில் கௌதம் சிக்கி கொள்வானா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரையில் வில்லனாகவே காட்டப்பட்டு வந்த ஜீவனாந்தம் உண்மையிலேயே நல்லவரா அல்லது கெட்டவரா? அவர் ஏன் இப்படி சதிவேலைகளை செய்கிறார் என்ற முடிச்சு விரைவில் விடுவிக்கப்படும் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

எதிர்நீச்சல் தொடரின் திரைக்கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக நடத்தப்படுவது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola