சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடருக்கான ப்ரோமோ எப்போது வெளியாகும் என மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள் ரசிகர்கள். அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


 



கைரேகையை எடுத்த ஜீவானந்தம் :


எதிர்நீச்சல் சீரியலில் மிகவும் விறுவிறுப்பான கட்டமாக ஜீவானந்தம் - குணசேகரன் சந்திப்பு எப்போது நடக்கும் என எதிர்பார்த்த அந்த தருணம் தற்போது துவங்கியுள்ளது. ஜீவானந்தம், அப்பத்தா ஏற்கனவே எழுதி கொடுத்த சொத்துக்கள் பத்தாது மீதம் உள்ளதையும் அவரிடம் இருந்து பெற வேண்டும் என்றால் அவரின் கைநாட்டு தேவை என்பதால் அதற்கான வேலையில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஜீவானந்தம் மற்றும் அவரின் பிஏ அப்பத்தாவின் கைரேயை எடுப்பதற்காக அவரின் அறைக்கு சென்று கைரேகையை பத்திரத்தில் எடுத்துவிடுகிறார்.


 



டென்ஷனான குணசேகரன் :


மறுபக்கம் குணசேகரன் அப்பத்தாவின் கைரேகையை எடுத்து விட வேண்டும் என ஆடிட்டரை வைத்து செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் ஆடிட்டர் கைரேகை எடுக்க முயற்சிக்கும் போது ஜனனி  வந்த அதை தடுத்துவிடவே எடுக்காமல் திரும்பி செல்கிறார். அதை குணசேகரிடம் போய் கூறுகையில் வழக்கம் போல குணசேகரனிடம் சேமித்தியாக திட்டு வாங்கி கொள்கிறார். கடுப்பான ஆடிட்டர் இது ஒன்னும் என்னுடைய வேலை கிடையாது என சொல்கிறார். அந்த சமயத்தில் கதிர் வந்து கைரேகை எடுத்தாச்சா என கேட்டவுடன் வேண்டாம் நான் கடுப்பாகி விடுவேன் என டென்ஷானாகி விடுகிறார் குணசேகரன். 


ஷாக்கான ஜனனி :
 
மறுபக்கம் ஜீவானந்தம், அப்பத்தாவின் கைரேகையை எடுத்துவிட்டதை சிசிடிவி புட்டேஜ் மூலம் மொபைலில் அறிந்து கொண்ட ஜனனி, சக்திக்கு போன் மூலம் உடனே வீட்டுக்கு போக வேண்டும் சீக்கிரம் வா என வரச்சொல்லி அழைத்து வீட்டுக்கு விரைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் சீரியலுக்கான ப்ரோமோ. 


ஒவ்வொரு நாளும் சஸ்பென்ஸ் அதிகரித்து கொண்டே போகிறது. ஜீவானந்தம் அப்பத்தாவின் கைரேகையை எடுத்தது தெரிந்தால் குணசேகரன் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.