சீதாராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கு  ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “சீதாராமம்”. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம்  இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  பலரும் சீதாராமம் படம் திரையரங்குகளில் கூட்டத்துடன் கொண்டாடப்பட வேண்டும் என்றும், சீதாராமம் ஒரு காவியக் காதல் போல் காட்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். இப்படம் முதல் வார இறுதியில் ரூ.10 கோடி வசூல் செய்தது. 






இந்நிலையில் தெலுங்கு ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் அன்பு நிறைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது முதல் படத்திலிருந்து தெலுங்கு திரையுலக ரசிகர்களிடத்தில் கிடைத்த அன்பு குறித்து தெரிவித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்த ஓ காதல் கண்மணி படம் தெலுங்கில்  ஓ பங்காரம் என டப் செய்யப்பட்டு வெளியானது. மணி சாருக்கு நன்றி. ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனக்கு வாய்ப்பு கொடுத்து என் மீது மிகுந்த அன்பு காட்டினீர்கள். அதன்பிறகு நாகி மற்றும் வைஜெயந்தி எனக்கு மகாநதியில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தனர். அந்த படத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட கிடைத்த அன்பும் மரியாதையும்  அதிகம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,  குரூப் போன்ற படங்கள் டப் செய்யப்பட்ட போது கொடுக்கப்பட்ட ரெஸ்பான்ஸ் மறக்கவே முடியாதது. 


அதன்பின் சீதா ராமம் படத்துக்கு  ஸ்வப்னாவும் ஹனுவும் என்னை அணுகியபோது நான் பாதுகாப்பான கைகளில் இருக்கிறேன் என உணர்ந்தேன். தரமான படத்தை வழங்குவோம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை இனி நேரடியான தனித்துவம் வாய்ந்த தெலுங்குப் படங்களில் மட்டுமே எப்போதும் நடிக்க விரும்புகிறேன்.  ஹனு, மிருணாள், ராஷ்மிகா, சுமந்த் அண்ணா, விஷால், பி.எஸ்.வினோத் சார் மற்றும் பல கலைஞர்கள் ஆகியோரின் பங்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தெலுங்கின் சினிமாவை விரும்பும் பார்வையாளர்களுக்கு நன்றி. சினிமாக் கலையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றி. என்னை உங்களில் ஒருவனாக நினைக்க வைத்ததற்கு நன்றி. மேலும் நீங்கள் எங்கள் மீது பொழியும் அனைத்து அன்பும் நன்றியுணர்வு நிறைந்தது என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண