இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் நடித்த நடிகை ஸாரா பைத்தியனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 
பாலிவுட்டின் பிரபலமான மார்வெல் தயாரிப்பில் வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் நடித்த நடிகை ஸாரா பைத்தியன். இவர் மீது  பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 13 முதல் 15 வயது மதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நாட்டிங்காமில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக நடிகை ஸாரா நீதிமன்றத்தில் ஆஜரானார். 


இரு தரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதி ஸாராவுக்கு அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். தான் ஒரு செலிபிரிட்டி என்பதாலும், பண பலத்தாலும் வழக்கை நீர்த்துப்போக செய்ய முடியும் என ஸாரா நம்பி வந்ததாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு ஹாலிவுட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் நடிகையின் கணவனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.






முன்னதாக, 2005ம் ஆண்டில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை அச்சிறுமிக்கு ஸாராவும்,அவரது கணவரும் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரமே நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஹாலிவுட்டில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் பிரபல நடிகைக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ள விவகாரம் சினிமா உலகையே அதிரவைத்துள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண