செல்வராகவன்


காதல் கொண்டேன் , 7 ஜி ரெயின்போ காலணி , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன போன்ற தனித்துவமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். கடைசியாக இவர் இயக்கி தனுஷ் நடித்த நானே வருவேன் படம் வெளியானது. புதுபேட்டை 2 , ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்கள் லிஸ்டில் உள்ளன. திரைப்படங்கள் இயக்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். விஜயின் பீஸ்ட் , பகாசூரன் , சாணி காயிதம் , சமீபத்தில் வெளியான ராயன் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 


சினிமா தவிர்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார் செல்வராகவன். அரசியல் கருத்துக்கள் , இளைஞர்களுக்கான மோடிவேஷன் கருத்துக்கள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி தனது வீடியோக்களில் பேசி வருகிறார். சமீபத்தில் தமிழர்கள் தமிழில் பேச அவமானமாக நினைப்பதும் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக பேசுவது பற்றி அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரது எக்ஸ் தள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது


" காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்." என செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அவர் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து சொன்னதா அல்லது பொதுவாக சொன்னதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.