இயக்குநர் ரவி அரசு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இனிமேல் தான் இயக்கும் படங்களை தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாக்க இருபதாகவும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாகவும் ரவி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

விஷாலின் 30 ஆவது படமாக உருவாகி வந்த மகுடம் திரைப்படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து அவர் விலகினார். படத்தில் நாயகனாக நடித்த விஷாலே இந்த படத்தை தற்போது இயக்கி வருகிறார். மகுடம் படத்தில் இருந்து விலகிய இயக்குநர் அரசு தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஃபைவ் சி ஃபிலிம்ஸ் என அவர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார். 

Continues below advertisement

ரவி அரசு வெளியிட்ட அறிக்கை 

இது தொடர்பாக ரவி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "2004-ஆம் ஆண்டு, இயக்குநர் வெற்றிமாறன் சாரிடம் உதவியாளராகச் சேர்ந்து எனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினேன். இந்தப் பயணம் 10 ஆண்டுகள் நீடித்தது.இந்தக் காலகட்டத்தில்,அவரது நிபுணத்துவமும் கதைசொல்லல் மீதான எனது ஆர்வமும் என்னை மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு படைப்பாளியாக வடிவமைத்தன. இதுவரை, நான் 'ஈட்டி' மற்றும் 'ஐங்கரன்' என இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளேன்.இப்போது 2026-ஆம் ஆண்டில்,தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்திற்குப் பிறகு,காலம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.நான் 'ஃபைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். "ஃபைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்" என்னால் இயக்கப்படும் திரைப்படங்களைத் தயாரிப்பதோடு,வளர்ந்து வரும் இளம் திரைப்பட இயக்குனர்களையும் ஊக்குவிக்கும்."ஃபைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்", பார்வையாளர்களுடன் நன்கு ஒன்றிப்போகும்,மிகவும் பொழுதுபோக்கு மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. எங்களின் தயாரிப்பு #1 குறித்த விவரங்களை விரைவில் அறிவிப்போம்." என்று தெரிவித்துள்ளார்