தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கபூரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 90 களில் வாந்த பல இளைஞர்களை தனது படங்கள் மூலமாக காட்டி இழுத்தவர். தற்போது பல படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார் ராஜ் கபூர். சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி சீரியலின் இயக்குநரும் இவர்தான். ராஜ் கபூர் ஒரு தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். ஆரம்ப காலத்தில் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சிகளை எடுத்து வெற்றியும் கண்டுள்ளார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் காவல்துறை அதிகாரியாக தேர்வான அவர் , காவல்துறையை நம் பின்னால் வர வைக்க வேண்டும் என்றால் அதற்கு அரசியல்வாதி ஆக வேண்டும் அல்லது சினிமாக்காரனாக வேண்டும் என நினைத்துதான் இயக்குநராக மாற சென்னையை முகாமிட்டுள்ளார்.
ராஜ் கபூர் அடுத்தடுத்து நிறைய படங்களை இயக்கியிருந்தாலும் இந்த கால தலைமுறைக்கும் பிடித்த மாதிரியான படங்கள் ஏராளம் . அவற்றுள் அவள் வருவாளா , ஆனந்த பூங்காற்று , வள்ளல், சுதந்திரம் உள்ளிட படங்களும் அடங்கும். அந்த காலத்து டாப் நடிகர்களான பிரபு , கார்த்திக், முரளி உள்ளிட்டவர்களை வைத்து படம் எடுத்தாலும் ராஜ் கபூருக்கு எப்போதுமே விஜய்காந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் அது இறுதி வரையில் நடக்கவில்லை என வருந்தும் இயக்குநர் ராஜ் கபூர், அவருடன் நடித்த அனுபவங்கள் அதற்கான ஏக்கத்தை குறைத்தது என்கிறார். ராஜ்கபூருக்கு ஷாருக் கபூர் என்ற மகன் இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மெக்கா புனித யாத்திரைக்காக சவுதி அரேபியா சென்ற அவர் , கடுமையான சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி அந்த நாட்டிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.