அரசு தடை செய்த அந்த படத்தை வெளியிடுவோம்...சிறைக்குச் செல்ல தயார்..சவால்விட்ட பா ரஞ்சித்
இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று தடை செய்யப்பட்ட சந்தோஷ் திரைப்படத்தை வெளியிட இருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்

பா ரஞ்சித்
இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் வானம் கலைத் திருவிழா நடத்தி வருகிறது. இலக்கிய விவாதம் , திரைப்பட விழா போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வில் இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்ட படமான சந்தோஷ் படம் திரையிடப்பட இருந்தது.
சந்தோஷ் திரைப்படத்தை திரையிட தடை
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சந்தியா சூரி இயக்கியுள்ள படம் சந்தோஷ். சர்வதேச விருது விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. தனது கணவன் இறந்ததைத் தொடர்ந்து அவரது கான்ஸ்டெபிள் வேலைக்கு வருகிறார் நாயகி. பட்டியலின பெண் ஒருவரின் கொலையை விசாரிப்பதே படத்தின் கதை. இப்பம் காவல் துறையை தவறான முறையில் சித்தரிப்பதாக கூறி இந்தியாவில் இப்படத்தை வெளியிட மறுத்தது சென்சார் வாரியம். வானம் திரைப்பட விழாவிலும் படத்தை திரையிட சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் பேசிய பா ரஞ்சித் இப்படி கூறினார்
Just In




கைதாக தயார் - பா ரஞ்சித்
சினிமாவில் வெற்றித் தோல்விகளுக்கு அப்பாற்பட்டு நமது அரசியலை கலைஞர்கள் புரிந்துகொள்வதை நான் ரொம்ப முக்கியமான நகர்வாக பார்க்கிறேன். மார்கழி மக்களிசை நிகழ்ச்சி கிட்டதட்ட ஒரு கோடி செல்வாகும் நிகழ்வுதான். அவ்வளவு பணத்தை ஏன் ஒரு நிகழ்வில் போட வேண்டும் என்று என்னிடம் கேட்பார்கள். இந்த பணத்தை ஏதாவது மக்களுக்கு உதவும் அமைப்பை தொடங்கலாமே என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான கலாச்சார நிகழ்வுகளில் நாம் தொடங்கி வைக்கும் விவாதம் நிறைய இளைஞரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பாபாசாகேப் அம்பேத்கரிடம் தான் நான் அதை கற்றுக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியை நிகழ்த்தி காட்டியதில் பெரும் மகிழ்ச்சி.
அதேபோல் படங்கள் திரையிடக் கூடாது என்று பிரச்சனையும் வந்தது. சந்தோஷ் படத்தை இங்கு இல்லை என்றாலும் வெளியில் கூட திரையிடலாம். நாம் ஒன்றும் பெரிய குற்றம் எல்லாம் செய்யவில்லை. நிச்சயமாக அந்த படத்தை விரைவில் திரையிடுவோம். அப்படி ஒரு பிரச்சனை என்றால் அதை எதிர்கொள்ளலாம் கொஞ்ச நாள் ஜெயிலில் போய் உட்காரலாம். முடியல எவ்ளோதான் வேலை செய்துகொண்டிருப்பது. கொஞ்ச நாள் ஜெயிலில் போய் உட்காரலாம் . சிறைக்கு செல்ல தயார். இங்கு இருக்கும் மக்களுக்கான சினிமாவை எடுப்பதற்கு எங்களுக்கு எல்லா விதமான உரிமையும் உண்டு. அதை சட்டத்தாலும் தடுக்க முடியாது"