கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தற்போது  விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில்,  ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்(Sun Pictures) தயாரிக்க இருப்பது உறுதியானது. நெல்சன் திலீப்குமார்(Nelson Dilipkumar) இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது என்று உறுதியானது.


இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அறிவிப்பு தொடர்பாக வெளியான வீடியோவில் ரஜினி ஸ்டைலாக பார்த்த பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்தனர்.  இந்த  நிலையில் நெல்சன்  அளித்த பேட்டி ஒன்று வைரலாகி  வருகிறது.






அதில் ”எனக்கு  சினிமாவுல ரொம்ப நாள் வீணாப்போச்சு . அதனால ஒரு படம் பண்ணிடம்னுதான் ஆசை இருந்துச்சு. அந்த படம் கமர்ஷியலா நல்ல ஹிட் அடிச்சா போதும்னுதான் நான் நினைத்தேன்.கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு நடித்த படங்கள் எல்லாமே போனஸ்தான். ஒரு படத்துல யார் நடிக்கிறா என்பதை தாண்டி படத்தோட கண்டெண்ட்தான் பேசும்னு நான் ரொம்ப நம்புறேன்.


கோலமாவு கோகிலாவையும் அந்த நம்பிகையிலதான் எடுத்தேன்.கோலமாவு கோகிலா படத்துல சிவகார்த்திகேயன் கல்யாண வயசு பாட்டை எழுதியிருந்தாரு. அது புரோமோஷனுக்காகத்தான் கேட்டேன். ஆனால் அதையே அவர் ரொம்ப சின்ஸியரா பண்ணினாரு. செல்லம்மா பண்ணும் போது அனிருத்தான் மறுபடி சிவகார்த்திகேயனை எழுத சொல்லலாம்னு சொன்னாரு. சிவகார்த்திகேயன்தான் இப்போதெல்லாம் பாடல்னா நியாபகம் வருது.  


அவர்  ஹீரோங்குறதையே மறந்துட்டேன். அவர்  எழுதுற பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.அனிருத் தன்னோட வேலையை எப்போதோ முடிச்சுடுவாரு. அதன் பிறகு அதை அழகுப்படுத்த என்னெவெல்லாம் செய்யலாம் என வேலை செய்துகொண்டே இருப்பார். கடைசி நேரம் வரைக்கும் அதை செய்வார் அதனால்தான் தாமதம் . அவர் வேண்டுமென்றே செய்வதலில்லை.” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.